Latest News :

‘கடைசி விவசாயி’ படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள்! - நன்றி தெரிவித்த இயக்குநர் மணிகண்டன்
Saturday August-26 2023

விஜய் சேதுபதி நடிப்பில், மணிகண்டன் இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘கடைசி விவசாயி’ திரைப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்திருக்கிறது. இதையடுத்து படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான மணிகண்டன் நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

 

அனைவருக்கும் அன்பான வணக்கம். 

 

மக்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட கடைசி விவசாயி திரைப்படத்திற்கு மிகப்பெரும் அங்கீகாரமாக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  டிரைபல் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான  “கடைசி விவசாயி”  படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைக்க காரணமாக இருந்த விருது தேர்வு குழுவினருக்கும், இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கும், மூத்த பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும், இணையதள ஊடகங்களுக்கும்  இந்நேரத்தில்  என் சிரம் தாழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். 

 

கடைசி விவசாயி படத்தினில், முதிய வயதிலும் சோர்வின்றி நடித்து, அக்காதாப்பாத்திரத்தை உயிர்ப்பித்து,  கொண்டாட வைத்த மறைந்த அய்யா நல்லாண்டி அவர்களுக்கும், இப்படத்தினை உருவாக்க மிகபெரும் ஒத்துழைப்பை தந்த ஊர்மக்களுக்கும், இப்படத்தினை  உலகம் முழுதும் கொண்டு சேர்த்த  Vijaysethupathi Production மற்றும் 7cs Entertaiments  நிறுவனங்களுக்கும், இந்தப் படத்தினை உருவாக்க உறுதுணையாகவும் இருந்து, சிறப்பாக நடித்தும் கொடுத்த மக்கள் செல்வன் திரு.விஜய் சேதுபதி அவர்களுக்கும், சக தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 

 

தேசிய விருதுக்காக மனதார பாராட்டிய  மக்கள் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 69 வது தேசிய விருதுகளில், தமிழ் மொழிக்கு, கடைசி விவசாயி படம் இரண்டு விருதுகளை பெற்றுள்ளது மிகப்பெரும் மகிழ்ச்சியை தருகிறது. இது போல படைப்புகளை உருவாக்க, இந்த விருது மிகப்பெரிய ஊக்கம் தந்துள்ளது. மீண்டும் உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

அன்புடன்

ம.மணிகண்டன்

 

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Related News

9201

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் புதிய அப்டேட்!
Tuesday November-11 2025

நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...

Recent Gallery