Latest News :

22 ஆண்டுகளுக்கு பிறகு கவுண்டமணியுடன் நடிக்கும் முத்துக்காளை!
Saturday September-02 2023

சாய் ராஜகோபால் இயக்கத்தில் கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இதில் அரசியல்வாதியாக நடிக்கும் கவுண்டமணிக்கு உதவியாளராக முத்துக்காளை நடிக்கிறார்.

 

எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் பிரபு நடித்த ’என் உயிர் நீதானே’, சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்திக் நடித்த ’அழகான நாட்கள்’ படத்திற்கு பிறகு 22 ஆண்டுகள் கழித்து, ’ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் மூலம் மீண்டும் கவுண்டமணி படத்தில் முத்துக்காளை நடிக்கிறார்.

 

இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது, முத்துக்காளையை தன் அருகே அழைத்த கவுண்டமணி, அனைவரிடமும் ’என் உயிர் நீதானே’ படத்தின் காமெடி வசனத்தை பேசி, பதில் வசனத்தை முத்துக்காளையை பேச சொல்லி, ரசிச்சு சிரித்தார். படக்குழுவினர் அனைவரும் அவரோடு சிரித்து, மகிழ்ந்தனர்.

 

22 வருடங்களுக்குப் பிறகும் தான் பேசிய வசனத்தை நினைவுக்கூர்ந்து தன்னை நடிகர் கவுண்டமணி பாராட்டியது குறித்து கூறிய நடிகர் முத்துக்காளை, ”கவுண்டமணி அண்ணனோடு நான் நடிக்கும் மூன்றாவது படம் ’ஒத்த ஓட்டு முத்தையா’. நான் வளர்ந்து வரும் நேரத்தில் இவரோடு நடித்த ’என் உயிர் நீதானே’ படத்தின் காமெடி தான் எனக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. தற்போது ’லக்கி’, ’ஷூ கீப்பர்’ , ’முனியாண்டியின் முனிப்பாய்ச்சல்’, ’பாதகன்’, ’கோட்டை முனி’, ’தொடு விரல்’, ’அடி ஆத்தி’, ’உதிர்’, ’கில்லி மாப்பிள்ளை’, ’ஸ்ரீ சபரி ஐயப்பன்’, ’சாஸ்தா’, ’அதையும் தாண்டி புனிதமானது’ என பல படங்களில் நடித்து வருகிறேன். கவுண்டமணி அண்ணனோடு நடித்துவரும் ’ஒத்த ஓட்டு முத்தையா’எனக்கு பெரும் பேரு வாங்கி தரும்.” என்றார்.

Related News

9214

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ படத்தின் புதிய அப்டேட்!
Tuesday November-11 2025

நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...

Recent Gallery