விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார், கெளரி கிஷன் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ’அடியே’ திரைப்படத்தை தயாரித்த மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்த பிரபா பிரேம்குமார் தயாரிப்பு அடுத்து உருவாகும் படம் ‘போட் - நெய்தல் கதை’.
இயக்குநர் சிம்பு தேவன் இயக்கும் இப்படத்தில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்கிறார்.
முழுக்க முழுக்க கடலில் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் தலைப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தில் இடம்பெறும் கானா பாடல் ஒன்றை பிரபல கர்நாடக இசைப்பாடகி பத்மபூஷன் சுதா ரகுநாதன் பாடியுள்ளார் என்ற தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
படத்தின் நாயகனை நோக்கி நாயகி ஒரு கானா பாடல் பாடுவது போன்ற சூழல் படத்தில் இடம்பெற்றுள்ளது. இதற்கான பாடலை உருவாக்கிய பிறகு, இந்த பாடலை சுதா ரகுநாதன் பாடினால் நன்றாக இருக்கும் என்று இசையமைப்பாளரும், இயக்குநரும் விரும்பியுள்ளனர்.
அதன்படி, அவர்கள் பாடகி சுதா ரகுநாதனை அனுகி தங்களுடைய விருப்பத்தை தெரிவித்த போது, “எனக்காக ஒரு கானா பாடலை யோசித்தது ஆரோக்கியமான பரிசோதனை முயற்சி, இசை என்பது ஒலி வடிவமே, நிச்சயம் நான் பாடுகிறேன். ஆனால், தற்போது லண்டனில் இருப்பதால், வருவதற்கு மூன்று மாதங்கள் ஆகும்” என்று சொல்லியிருக்கிறார்.
படக்குழுவும் அவருக்காக மூன்று மாதங்கள் காத்திருந்து, சுதா ரகுநாதன் சென்னை திரும்பியதும் பாடல் பதிவை நடத்தியுள்ளனர். வட சென்னையைச் சேர்ந்த கோல்ட் தேவராஜ் என்ற பாடலாசிரியர் எழுதிய கானா பாடலை பாடி முடித்த சுதா ரகுநாதன், பாடல் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
தற்போது விறுவிறுப்பான படப்பிடிப்பில் இருக்கும் ‘போட் - நெய்தல் கதை’ திரைப்படத்தை நவம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...