வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான சூரி, தற்போது ‘விடுதலை 2’ படப்பிடிப்பை முடித்த கையோடு, மீண்டும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்கிறார். இதில் சூரியுடன் சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். நாயகிகளாக ரேவதி சர்மா, ஷிவதா நாயர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுதியிருக்கும் இப்படத்திற்கு திரைக்கதை அமைத்து துரை செந்தில்குமார் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஆர்தர் ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ஈ.ராகவ படத்தொகுப்பு செய்ய, ஜி.துரைராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
மல்டி ஸ்டார் ஆக்ஷன் ஜானர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி நிறுவனங்கள் சார்பில் கே.குமார் தயாரிக்கும் இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் கும்பகோணத்தில் நடைபெற்றது.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...
ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார்...