வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான சூரி, தற்போது ‘விடுதலை 2’ படப்பிடிப்பை முடித்த கையோடு, மீண்டும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்கிறார். இதில் சூரியுடன் சசிகுமார், உன்னி முகுந்தன் ஆகியோரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். நாயகிகளாக ரேவதி சர்மா, ஷிவதா நாயர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுதியிருக்கும் இப்படத்திற்கு திரைக்கதை அமைத்து துரை செந்தில்குமார் இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஆர்தர் ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ஈ.ராகவ படத்தொகுப்பு செய்ய, ஜி.துரைராஜ் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
மல்டி ஸ்டார் ஆக்ஷன் ஜானர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி நிறுவனங்கள் சார்பில் கே.குமார் தயாரிக்கும் இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் கும்பகோணத்தில் நடைபெற்றது.
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...
ராதா ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் G...
நடிகரும், த.வெ.க தலைவருமான விஜயின் மகன் ஜேசன் சஞ்சய், தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாக உள்ளார்...