கடந்த மாதம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க பல நடிகர்கள் ஆர்வம் காட்டி வந்த நிலையில், நடிகர் விக்ரம் தனது மகன் துருவ் விக்ரமை அப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகப்படுத்த இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மேலும், அப்படத்தை இயக்க போகும் இயக்குநர் யார்? என்பதை இன்று மாலை அறிவிக்கப்படும் என்ற தகவலை வெளியிட்டதோடு, சில முன்னணி இயக்குநர்களின் பெயர்களும் உலா வந்து பெரும் குழப்பத்தை ஏற்படுத்த, விக்னேஷ் சிவன், பாலா, ஏ.எல்.விஜய் ஆகியோரது பெயர் மட்டும் முக்கிய இடத்தில் இருந்தது. அதிலும் பாலா மற்றும் விஜய் பெயர்கள் மட்டும் இறுதி பட்டியலில் இருக்க, இதில் விஜய் தான் விக்ரம் வாரிசை இயக்க போகிறார் என்று இறுதி தகவல் வெளியாக, அதுவும் இல்லாமல் போய்விட, மீண்டும் இதில் குழப்பம் நிலவியது.
இந்த நிலையில், விக்ரமின் மக்கள் தொடர்பாளர், துருவ் விக்ரமின் முதல் படத்தை இயக்கப் போவது பாலா தான் என்று சற்று நேரத்திற்கு முன்பு அறிவித்துள்ளார். இதன் மூலம் விக்ரம் மகனின் முதல் படத்தின் இயக்குநர் பெயரில் இருந்த குழப்பம் நீங்கியது.
வன்முறை காட்சிகளை அதிகமாக கையாளும் பாலா, ஆபாச காட்சிகள் அதிகம் கொண்ட ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கை எப்படி கையாளப் போகிறார்? என்பது பெரிய கேள்விக்குறியாக எழுந்துள்ளது.
லேர்ன் & டீச் புரொடக்ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...