தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பிறகு நடிகர் மற்றும் தயாரிப்பாளராக வெற்றி பெற்ற விஜய் ஆண்டனியின் மகள் சாரா தூக்குப் போட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் ஆண்டனி குடும்பத்துடன் சென்னை டிடிகே சாலையில் வசித்து வருகிறார். இவரது மகள் சாரா, 12ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வழியிலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவித்தனர்.
தற்கொலை செய்துகொண்ட சாரா, கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்ததாக சொல்லப்படுகிறது. மேலும், இது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றது. இந்த சம்பாம், சினிமா வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ‘பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பில் விஜய் ஆண்டனி மிகப்பெரிய விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி, தற்போது தான் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர இசையமைப்பாளர் - பாடகர்- இசை கலைஞரான 'ராக் ஸ்டார் ' அனிருத்தின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடைபெறுகிறது...
இயக்குநர் மணிரத்னத்தின் சீடரான ஆர்...
ஆல்பம் பாடல்களான “கச்சி சேரா”, “ஆச கூடா”, “சித்திர புத்திரி” போன்ற சென்ஷேசனல் ஹிட் பாடல்களால், இசைத்துறையில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய சாய் அபயங்கர், இப்போது திரையுலகிலும் கலக்க ஆரம்பித்துள்ளார்...