அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியான ‘ஜவான்’ திரைப்படம் வசூலில் பல சாதனைகள் நிகழ்த்தி வருகிறது. ரூ.1000 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கும் ‘ஜவான்’ தற்போது ஷாருக்கானின் முந்தைய மிகப்பெரிய வெற்றிப் படமான பதானின் வசூலையும் முறியடிக்க உள்ளது.
இந்திய திரையுலகில் இதுவரையிலும் அதிக வசூல் செய்த முதல் மூன்று படங்களில் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. ஹிந்தி மற்றும் பல்வேறு மொழிகளில் தொடர்ந்து ரசிகர்களை ஈர்த்து, பாக்ஸ் ஆபிஸில் அதிரடியான வசூலைக் குவித்து வருகிறது ஜவான், படம் வெளியாகி மூன்றாவது வாரத்தைக் கடந்த நிலையிலும் வசூல் குறைவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை.
'ஜவான்' திரைப்படம் மொத்தமாக அனைவரும் வியக்கும் வகையில் 528.39 கோடிகளை வசூலித்துள்ளது, ஹிந்தியில் மட்டும் இப்படம் 473.44 கோடிகளை குவித்துள்ளது, படத்தின் உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூல் (WW GBOC) 937.61 கோடிகளை எட்டியுள்ளது!
'ஜவான்' அகில இந்திய சாதனைகளை மட்டும் முறியடிக்கவில்லை; இது உலக அளவில் கூட ஒவ்வொரு நாளும் புதிய மைல்கல்லை தொட்டு சாதனை படைத்து வருகிறது. அமைத்து வருகிறது.
இத்திரைப்படம் ஏற்கனவே 'கதர்' திரைப்படத்தின் வாழ்நாள் வருவாயைக் கடந்துவிட்டது, இந்திய திரையுலகில் பதானின் மொத்த வசூலை இந்த வார இறுதியில் முறியடிக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் ஹிந்தி வசூல் ஞாயிற்றுக்கிழமைக்குள் 500 கோடியை எட்ட உள்ளது, இந்த மைல்கல்லை இந்தியாவில் மிக வேகமாக எட்டிய முதல் படம் இதுவாகும்.
கவர்ச்சியான கதைக்களம் மற்றும் நட்சத்திர நடிகர்களுடன் பார்வையாளர்களைக் கவர்ந்த இப்படம், பல புதிய சாதனைகள் படைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...
டாவ்ன் பிக்சர்ஸ் (Dawn Pictures) மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் (Dawn Pictures) தயாரிப்பில், நடிகர் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் ‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில், நேற்று சென்னனை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது...
The S.A.College of Arts & Science campus came alive with colors, music, and excitement as SA Rhapsody 2025 unfolded in all its glory on September 13, 2025...