அட்லீ இயக்கத்தில், ஷாருக்கான் நடிப்பில் வெளியான ‘ஜவான்’ திரைப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. மேலும், ஒரே ஆண்டில் நடிகர் ஷாருக்கானின் நடிப்பில் அடுத்தடுத்து வெளியான இரண்டு திரைப்படங்கள் தலா ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனை படைத்திருப்பதோடு, இத்தகைய சாதனைப் படைத்த ஒரே நடிகர் என்ற பெருமையையும் ஷாருக்கான் பெற்றுள்ளார்.
இப்படத்தின் கதைக்களம் மற்றும் நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பு மூலம் பார்வையாளர்களை வசீகரித்துள்ளது. சாதனை புத்தகத்தில் புதிய அத்தியாயத்தை இந்த திரைப்படம் எழுதி இருக்கிறது. ஜவான் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவதால், இப்படத்தின் வசூல் புதிய சாதனையை படைக்கும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஷாருக்கானின் 'ஜவான்' திரைப்படத்திற்கு நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களிடமிருந்து அபிரிமிதமான வரவேற்பு கிடைத்து வருவதால் சந்தேகத்திற்கு இடமின்றி இந்தத் திரைப்படம் மாபெரும் சினிமா ஆற்றலாக கணக்கிடப்பட வேண்டும்.
மேலும் இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூல் செய்து வருவதால், இந்தியாவிலும், உலகெங்கிலும் உள்ள ஷாருக்கான் ரசிகர்களுக்கு ’ஜவான்’ திரைப்படத்தை ஒரு சினிமா திருவிழாவை போல் கொண்டாடி வருகிறார்கள்.

ஷாருக்கானின் ‘ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் வழங்க, கெளரி கான் தயாரித்துள்ள ‘ஜவான்’ திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராக கெளரவ் வர்மா பணியாற்றியுள்ளார்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியான ‘ஜவான்’ திரைப்படம் தற்போதும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...
அறிமுக இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்...
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...