Latest News :

தொழிலதிபர் மீது தாக்குதல் - நடிகர் சந்தானத்தின் மீது போலீசில் புகார்!
Monday October-09 2017

கட்டுமான நிறுவன உரிமையாளர் மீது தாக்குதல் நடத்தியதாக நடிகர் சந்தானத்தின் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். கட்டுமான நிறுவன உரிமையாளரான இவருக்கும், நடிகர் சந்தானட்திற்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்கனவே பிரச்சினை இருந்துள்ளது.

 

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சந்தானம், சண்முகசுந்தரம் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, அதுவே மோதலாக மாறியுள்ளது. இதில் சண்முகசுந்தரம் மீது சந்தானம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் ரத்த காயம் அடைந்த நிலையில் சண்முகசுந்தரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இந்த விவகாரம் தொடர்பாக சந்தானம், சண்முகசுந்தரம் இருவரும் விருகம்பாக்கம் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். சண்முகசுந்தரத்திடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், நடிகர் சந்தானத்திடமும் விசாரணை மேற்கொள்ள உள்ளார்கள்.

Related News

927

மக்கள் என் கருத்துகளை ஏற்றுக்கொண்டனர் - இயக்குநர் பா.இரஞ்சித் பெருமிதம்
Sunday September-14 2025

லேர்ன் & டீச் புரொடக்‌ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...

கதை தேர்வு மூலம் வியக்க வைக்கும் அர்ஜூன் தாஸ்!
Saturday September-13 2025

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...

சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனத்துடன் வெற்றியை கொண்டாடிய ‘காந்தி கண்ணாடி’ படக்குழு!
Saturday September-13 2025

இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...

Recent Gallery