வரும் அக்டோபர் 18 ஆம் தேதி தீபாவளி பண்டிகையன்று வெளியாக உள்ள விஜயின் ‘மெர்சல்’ படத்திற்கு எதிரான் எழுந்த அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்த நிலையில், ரிலீஸ் பணிகளை தயாரிப்பு தரப்பு துரிதப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான புதிய புரோமோ டீசர்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, ‘மெர்சல்’ அனைவரையும் மிரள வைப்பது உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், கேரளாவில் ’மெர்சல்’ அதிக திரையரங்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அளவில் வசூலில் சாதனை படைத்த ‘பாகுபலி’ யே கேரளாவில் 302 திரையரங்கங்களில் வெளியிடப்பட்ட நிலையில், ’விவேகம்’ 320 திரையரங்கங்களில் வெளியாகி சாதனை படைத்தது, இந்த சாதனையை முறியடிக்கும் விதத்தில் ‘மெர்சல்’ 350 திரையரங்கங்களில் வெளியிடப்பட உள்ளது.
டீசர் பெற்ற லைக்குகள், யுடியுபில் 2 கோடிக்கும் அதிகமான பார்வையாளரை கவர்ந்த டீசர், ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய திரையரங்கில் பிரீமியர், என்று ‘மெர்சல்’ படம் மூலம் பல பெருமைகளை பெற்று வரும் விஜய், அஜித்தை தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டுள்ளார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...