Latest News :

பெண்கள் விடுதியில் நடக்கும் கிளுகிளுப்பான சம்பவம் ‘ரா...ரா...சரசுக்கு ரா...ரா...’!
Sunday October-08 2023

ரஜினிகாந்தின் ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் இடம்பெற்ற “ரா...ரா...சரசுக்கு ரா...ரா...” என்ற பாடல் வரிகள் மக்களிடம் மிக பிரபலமடைந்த நிலையில், தற்போது அந்த வார்த்தையை தலைப்பாக கொண்டு திரைப்பட்ம ஒன்று உருவாகி வருகிறது. 

ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ ஜெயலட்சுமி தயாரித்துள்ள இப்படத்தை கேஷவ் தெபுர் இயக்கியிருக்கிறார்.

 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஓரியா, பெங்காலி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் சுமார் 350 திரைப்படங்களில் நடன இயக்குநராக பணி புரிந்திருப்பவர் கேஷவ் தெபுர். பிரபு தேவா, நாட்டு நாட்டு பாடல் புகழ் பிரேம் ரக்‌ஷித், ராகவா லாரன்ஸ் போன்றவர்களிடம் உதவி நடன இயக்குநராகப் பணியாற்றிய கேஷவ் தெபுர், பல்வேறு மொழிகளில் சுமார் 2000 திரைப்படங்களில் நடனக் கலைஞராக பணியாற்றியிருக்கிறார்.

 

தற்போது இயக்குநராக அறிமுகமாகியுள்ள கேஷ தெபுர் தனது முதல் படத்திற்கு ’ரா...ரா...சரசுக்கு ரா...ரா...’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்.  இதில், கார்த்திக், காயத்ரி பட்டேல்  , KPY ஒய் பாலா , மாரி வினோத், காட்பாடி ராஜன், விஸ்வா, ரவிவர்மா ,அபிஷேக், பெஞ்சமின், சிம்ரன், தீபிகா, காயத்ரி ,ஜெஃபி, ஜெயவாணி, அக்ஷிதா ஆகியோர் நடித்துள்ளனர். ஆர்.ரமேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஜி.கே.வி இசையமைத்திருக்கிறார். 

 

பெண்கள் விடுதிக்குள் நுழைந்த சில வாலிபர்கள் ஒரு குற்றத்தில் சிக்கிக் கொள்கிறார்கள். அதில் இருந்து அவர்கள் வெளிவந்தார்களா?, இல்லையா? என்பதே படத்தின் மையக்கரு. அதற்கிடையே நடக்கும் பரபரப்பான, விறுவிறுப்பான மற்றும் கிளுகிளுப்பான சம்பவங்கள் தான் கதை செல்லும் பாதை. க்ரைம், ஆக்‌ஷன், ஹாரர் என அனைத்தும் நிறைந்த ஒரு படமாக உருவாகியிருக்கிறது.

 

இப்படம் பற்றி தயாரிப்பாளர் ஏ.ஜெயலட்சுமி கூறுகையில், “இப்படத்தின் கதை ஒரே இரவில் நடக்கிறது. பெல்லாரி ராஜாவும் தாமோதரனும் அரசியலில் ஒன்றாக இருந்து பகைவர்களாக மாறியவர்கள். பெல்லாரி ராஜா அந்த தாமுவைக் கொன்று விடுகிறான். அதை நேரில் பார்த்த பெண் வீடியோ எடுத்து விடுகிறாள். அவளைத் துரத்துகிறது பெல்லாரியின் கும்பல். அவள் எஸ்.ஆர்.லேடீஸ் ஹாஸ்டலுக்குள் ஓடிப் போகிறாள்.  லேடிஸ் ஹாஸ்டலுக்குள் இளைஞர்கள்  இரண்டு பேர் நுழைந்து விடுகிறார்கள். அங்குள்ள இரு பெண்களால் ஒரு கால் பாய் அழைக்கப்படுகிறான். ஆள் மாறாட்டக் குழப்பத்தில் ஒரு கொலை நடக்கிறது. இப்படி அடுத்தடுத்த கொலைகள் ,பரபரப்பு விறுவிறுப்பு கொண்ட பின்னணியில் இக்கதை உருவாகியுள்ளது.” என்றார்.

 

படத்தில் இடம்பெற்றுள்ள இக்கால இளைஞர்களும் யுவதிகளும் பேசும் அரட்டைகளும் , சுதந்திரமான காட்சிகளும் பார்த்து அதிர்ந்து போன சென்னை மண்டல தணிக்கை அதிகாரி 60 வெட்டுகள் கொடுத்திருந்தார். ஆனால் அதையும் மீறி  மும்பை சென்று மறு தணிக்கை செய்து வந்துள்ளார்கள். 

 

இப்படத்தை ஸ்கை வாண்டர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஏ.ஜெயலட்சுமி  என்கிற பெண்மணி தைரியமாகத் தயாரித்துள்ளார். படத்துக்கான கதை பிடித்துப் போனதால் இப்படத்தைத் தயாரித்ததாக அவர் கூறுகிறார்.

 

வரும் நவம்பர் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தை 9வி ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

Related News

9282

இணையத் தொடர் இயக்க முதலில் தயங்கினேன்! - ‘குட் வொய்ஃப்’ தொடர் பற்றி நடிகை ரேவதி
Friday July-04 2025

ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...

ரசிகர்களின் அன்பு வியக்க வைத்து விட்டது! - ‘லவ் மேரேஜ்’ வெற்றி விழாவில் நடிகர் விக்ரம் பிரபு உற்சாகம்
Friday July-04 2025

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம்  - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

Recent Gallery