சென்னையை அடுத்துள்ள குன்றத்தூர் அருகே திருமணம் மண்டபம் கட்டி வந்த நடிகர் சந்தானம், கட்டுமான நிறுவனம் ஒன்றுக்கு ரூ.3 கோடி கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சண்முக சுந்தரம், 3 வருடமாக மண்டபத்தை கட்டிக்கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் சந்தானம் பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.
இதற்கிடையே, இந்த பிரச்சினை குறித்து பேசுவதற்காக நடிகர் சந்தானம் நேரடியாக சண்முக சுந்தரத்தை பார்க்க சென்றுள்ளார். அப்போது அங்கு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அண்டஹ் நேரம் அங்கு வந்த வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவர் சண்முக சுந்தரத்திற்கு ஆதரவாக பேச, அவருடனும் சந்தானம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது இரு தரப்பினருக்கு இடையே கை கலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் சந்தானம் அடித்ததில் வழக்கறிஞர் பிரேம் ஆனந்த் என்பவருக்கு மூக்கில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காயம் ஏற்பட்ட வழக்கறிஞர் பிரேம் ஆனந்த், பாஜக தென் சென்னை மாவட்டத் துணைத் தலைவராக இருக்கிறார். தகவல் அறிந்ததும், பாஜகவினர் வளசரவாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, சந்தானம் மீது நடவடிக்கை எடுக்க கோஷமிட்டனர்.
இதையடுத்து, சந்தானம் மீது வளசரவாக்கம் போலீசார் 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சண்முகசுந்தரம், பிரேம் ஆனந்த் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சந்தானம் தலைமறைவாகிவிட்டதாக தெரிகிறது. எனவே அவரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...