பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு மக்களிடையே கிடைத்திருக்கும் வரவேற்பால் அவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளது. அதிலும் ஓவியா தான் டாப் லெவலில் இருக்கிறார்.
இதற்கிடையே, பிக் பாஸ் வீட்டில் ஓவியா மற்றும் ஜூலி இடையே நடைபெற்ற மோதலால், ஓவியா ரசிகர்கள் ஜூலியை கடுமையாக விமர்சனம் செய்தனர். தற்போது போட்டி முடிவடைந்து, போட்டியாளர்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நிலையில், ஓவியா ரசிகர்கள் ஜூலியை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூலியை ஓவியா ரசிர்கள் பேச விடாமல், ஓவியா...ஓவியா...என்று கூச்சலிட்டு அவரை மேடையில் இருந்து இறக்கினார்கள். இது பெரும் பரபரப்பாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. இதையடுத்து, “ஜூலியை யாரும் அவமானப்படுத்த வேண்டாம், அவர் ரொம்ப பாவம்” என்று ஓவியா தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஓவியா குறித்து பேசிய ஜூலி, “ஓவியாவிற்கு கிடைக்கும் புகழுக்கு அவர் தகுதியற்றவர். அவரது ரசிகர்களை அவர் மதிப்பதே இல்லை.” என்று கூறியிருக்கிறார்.
மீண்டும் ஓவியாவை சீண்டும் விதமாக ஜூலி பேட்டியில் பேசியிருப்பது ஓவிய ரசிகர்களை மேலும் கோபமடைய செய்துள்ளது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...