Latest News :

சந்தானத்தின் அறிமுகத்திற்காக இணைந்த 5 நடன இயக்குநர்கள்!
Tuesday October-10 2017

சந்தானம் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் படங்களில் ‘சக்க போடு போடு ராஜா’ படமும் ஒன்று. விடிவி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் அதிகமான பொருட்ச்செலவில் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறது.

 

சிம்பு இசையமைக்கும் இப்படத்தின் பாடல் ஒன்றை அனிருத் பாடியுள்ளார். சமீபத்தில் வெளியான அப்பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும், அப்பாடல் தான் படத்தில் சந்தானத்தின் அறிமுக பாடல் என்பதால், அதை மிக பிரம்மாண்டமான முறையில் படமாக்க திட்டமிட்ட இயக்குநர் ஜி.எல்.சேதுராமன்,

முன்னணி நடன இயக்குநர்களான ராஜு சுந்தரம், ஸ்ரீதர், தினேஷ், நோபல், ஜானி ஆகியோரை ஒன்றாக பணியாற்ற வைத்துள்ளார். ஒரு பாடலுக்கு ஐந்து நடன இயக்குநர்கள் பணியாற்றியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

 

“கலக்கு மச்சா டவுளத்துள 

 கால  வாரும் காலத்திலே 

 கலங்க நா கோழையில்லே

 களத்திளே இறங்கி காளபோல 

 ரைட்டு தாட்டு உள்ளத்திலே

 வெச்சு இருக்கும் நல்ல புள்ள..” என்ற இந்த பாடலை, “டங்கா மாரி ஊதாரி...” புகழ் ரோகேஷ் எழுதியுள்ளார்.

 

ஜி.எல்.சேதுராமன் இயக்கும் இப்படத்திற்கு ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் விவேக் நடித்திருக்கிறார். இவர்களுடன் சம்பத் ராஜ், ரோபோ சங்கர், சஞ்சனா சிங், விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

 

பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில், யுவன் ஷங்கர் ராஜா, டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர் ஆகியோர் பாடல் பாடியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.

Related News

938

மக்கள் என் கருத்துகளை ஏற்றுக்கொண்டனர் - இயக்குநர் பா.இரஞ்சித் பெருமிதம்
Sunday September-14 2025

லேர்ன் & டீச் புரொடக்‌ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...

கதை தேர்வு மூலம் வியக்க வைக்கும் அர்ஜூன் தாஸ்!
Saturday September-13 2025

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...

சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனத்துடன் வெற்றியை கொண்டாடிய ‘காந்தி கண்ணாடி’ படக்குழு!
Saturday September-13 2025

இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...

Recent Gallery