Latest News :

சந்தானத்தின் அறிமுகத்திற்காக இணைந்த 5 நடன இயக்குநர்கள்!
Tuesday October-10 2017

சந்தானம் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் படங்களில் ‘சக்க போடு போடு ராஜா’ படமும் ஒன்று. விடிவி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் அதிகமான பொருட்ச்செலவில் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வருகிறது.

 

சிம்பு இசையமைக்கும் இப்படத்தின் பாடல் ஒன்றை அனிருத் பாடியுள்ளார். சமீபத்தில் வெளியான அப்பாடல் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும், அப்பாடல் தான் படத்தில் சந்தானத்தின் அறிமுக பாடல் என்பதால், அதை மிக பிரம்மாண்டமான முறையில் படமாக்க திட்டமிட்ட இயக்குநர் ஜி.எல்.சேதுராமன்,

முன்னணி நடன இயக்குநர்களான ராஜு சுந்தரம், ஸ்ரீதர், தினேஷ், நோபல், ஜானி ஆகியோரை ஒன்றாக பணியாற்ற வைத்துள்ளார். ஒரு பாடலுக்கு ஐந்து நடன இயக்குநர்கள் பணியாற்றியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

 

“கலக்கு மச்சா டவுளத்துள 

 கால  வாரும் காலத்திலே 

 கலங்க நா கோழையில்லே

 களத்திளே இறங்கி காளபோல 

 ரைட்டு தாட்டு உள்ளத்திலே

 வெச்சு இருக்கும் நல்ல புள்ள..” என்ற இந்த பாடலை, “டங்கா மாரி ஊதாரி...” புகழ் ரோகேஷ் எழுதியுள்ளார்.

 

ஜி.எல்.சேதுராமன் இயக்கும் இப்படத்திற்கு ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் விவேக் நடித்திருக்கிறார். இவர்களுடன் சம்பத் ராஜ், ரோபோ சங்கர், சஞ்சனா சிங், விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

 

பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில், யுவன் ஷங்கர் ராஜா, டி.ராஜேந்தர், உஷா ராஜேந்தர் ஆகியோர் பாடல் பாடியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.

Related News

938

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

Recent Gallery