அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ பல தடைகளை கடந்து தீபாவளியன்று நிச்சயம் வெளிவரும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், அதே படக்குழுவினரின் புது முடிவால் விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
’மெர்சல்’ படத்தின் டீசர் வெளியான ஒரு சில தினங்களிலேயே அதிகமான லைக்குகளை பெற்று உலக அளவில் சாதனை புரிந்ததோடு, அதிகமான பார்வையாளர்கள் பார்த்த திரைப்பட டீசர் என்ற சாதனையையும் நிகழ்த்தியது. இத்துடன் தொடர்ந்து பல சாதனைகளை ‘மெர்சல்’ படம் நிகழ்த்தி வருவதால், படத்தின் டிரைலரை வெளியிட வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.
ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்பட மெர்சல் டிரைலரை வெளியிட முடிவு செய்திருந்த தயாரிப்பு தரப்பு, படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே இருப்பதால், தற்போது டிரைலரை வெளியிடப்போவதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அதே சமயம், ரசிகர்களின் ஏமாற்றத்தை போக்கும் விதத்தில், பல புரோமோ டீசர்களை வெளியிட முடிவு செய்துள்ள படக்குழு, பலவிதமான போஸ்டர் டிசைன்களையும் வெளியிட முடிவு செய்துள்ளது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...