’தாமிரபரணி’ மற்றும் ‘பூஜை’ படங்களை தொடர்ந்து நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் ஹரி மூன்றாவது முறையாக ‘ரத்னம்’ படத்திற்காக கைகோர்த்துள்ளார்கள். இவர்களது கூட்டணியின் இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி படங்கள் என்பதால், இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அந்த எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்யும் விதமாக படத்தின் ஓடிடி உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி ஓடிடி நிறுவனமான அமேசான் பிரைம், ‘ரத்னம்’ படத்தின் ஓடிடி உரிமையை மிகப்பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாம். இதுவரை நடிகர் விஷாலின் திரை பயணத்தில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் இந்த வியாபாரம் நடந்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் வெளியாகி கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்தியதோடு, படத்தின் மீதான் எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிருவனங்கள் சார்பில் கார்த்திகேயன் சந்தானம் மற்றும் அலங்கார் பாண்டியன் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். டி.எஸ்.ஜெய் படத்தொகுப்பு செய்கிறார்.
விஷாலின் 34 வது திரைப்படமாக உருவாகும் ‘ரத்னம்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது திருப்பதி பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம் - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...