இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணி பாடகியுமான பவதாரணி, உடல் நலக்குறைவால் இன்று மாலை மருத்துவமனையில் உயிரிழந்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 5 மாதங்களாக இலங்கையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பவதாரணி, இன்று மாலை 5.20 மணியளவில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 47.
பவதாரணி மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், பல அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
பவதாரணியின் உடல் நாளை மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.
பவதாரணிக்கு திருமணமாகிவிட்டது. அவரது கணவர் விளம்பர நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு குழந்தை இல்லை.
சியா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் எஸ்...
பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகியுள்ள ‘ரெட்ட தல’ திரைப்படத்தில் அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்...
தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் (The Show Must Go On & Black Madras Films) நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , எஸ்...