Latest News :

பெரிய ஹீரோ மூலம் ’ப்ளூ ஸ்டார்’ பட இயக்குநருக்கு கிடைத்த அங்கீகாரம்!
Wednesday January-31 2024

திரைப்படங்களை உருவாக்குவது கடினமாக இருந்த காலம் கடந்து தற்போது திரைப்படங்களை உருவாக்குவது மிக எளிது, ஆனால் அதை வெளியிடுவதும், மக்களிடம் கொண்டு சேர்ப்பதும் தான் மிக மிக கடினமானதாகிவிட்டது. இந்த கடினத்தை எளிதில் கடந்து விடலாம் என்ற நம்பிக்கையை ஒடிடி என்ற தளம் உருவாக்கி கொடுத்தது. ஆனால், அதுவும் இப்போது இல்லை. வழக்கம் போல் திரையரங்குகளில் வெளியாகி மக்களின் ஆதரவு பெற்ற பிறகே அந்த படங்களுக்கு ஒடிடி மவுசு கிடைக்கிறது. இத்தகைய சூழலில் ஒரு திரைப்படம் வெற்றி பெறுவது என்பது மிக...மிம...கடினம் என்றாலும், இந்த கடினமான சூழலிலும் பல படங்கள் வெற்றி பெற்று வருகிறது.

 

அந்த வகையில், கடந்த வாரம் வெளியான திரைப்படங்களில் ஒன்றான ‘ப்ளூ ஸ்டார்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதனை படக்குழு இன்று நட்சத்திர ஓட்டலில் கேக் வெட்டி கொண்டாடியது. இந்த நிகழ்வில் படக்குழுவினரோடு, பத்திரிகையாளர்களும் கலந்துக்கொண்டார்கள்.

 

வழக்கம் போல் நிகழ்ச்சியில், பலர் பலவிதமாக பேசி தங்களது மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் தெரிவித்தார்கள். குறிப்பாக படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குநர் பா.இரஞ்சித், ஒரு தகவலை பகிர்ந்துக்கொண்டார். அதை மட்டும் இங்கே பதிவிட்டால், இந்த படம் உண்மையாகவே வெற்றி பெற்றிருக்கிறது, என்பதை உலகம் அறிந்துக்கொள்ளும் என்று நினைக்கிறோம்.

 

அதாவது, பா.இரஞ்சித் பேசுகையில், “படம் ரீலிசாகி நான்கு நாட்களில் ஒரு பெரிய ஹீரோ அப்படத்தை இரண்டு முறைப் பார்த்துவிட்டு, போன் செய்து நாம் ஒரு படம் பண்ணலாம் என்று ஜெயக்குமாரிடம் பேசியிருக்கிறார். இது எனக்குக் கூட நடந்தது இல்லை.  ஜெயக்குமாருக்கு நடந்திருப்பது எனக்கு சந்தோசம்.” என்று தெரிவித்தார்.

 

தற்போதைய தமிழ் சினிமா ஹீரோக்கள் கையில் இருந்தாலும், அந்த ஹீரோக்களுக்கான சரியான கதை மற்றும் அதை காட்சி மொழியில் கொடுக்கும் திறன் இயக்குநர்கள் கையில் இருந்தாலும், அப்படிப்பட்ட இயக்குநர்களை அடையாளம் காணுபவர்களாக முன்னணி ஹீரோக்கள் இருக்கிறார்கள். அப்படி ஒரு முன்னணி ஹீரோ ‘ப்ளூ ஸ்டார்’ பட இயக்குநர் எஸ்.ஜெயக்குமாரை தொடர்பு கொண்டு ”தனக்கான கதை இருக்கிறதா?” என்று கேட்டு டிக்கடித்திருப்பதால், ‘ப்ளூ ஸ்டார்’ டாப் ஸ்டார் தான்.

Related News

9489

இணையத் தொடர் இயக்க முதலில் தயங்கினேன்! - ‘குட் வொய்ஃப்’ தொடர் பற்றி நடிகை ரேவதி
Friday July-04 2025

ஜியோ ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாகி இருக்கும் இணையத் தொடர் ‘குட் வொய்ஃப்’...

ரசிகர்களின் அன்பு வியக்க வைத்து விட்டது! - ‘லவ் மேரேஜ்’ வெற்றி விழாவில் நடிகர் விக்ரம் பிரபு உற்சாகம்
Friday July-04 2025

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான 'லவ் மேரேஜ்' திரைப்படம்  - ரசிகர்களின் பேராதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

Recent Gallery