‘ரங்கோலி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான வாலி மோகன் தாஸ், இயக்கும் இரண்டாவது படத்திற்கு ‘மெட்ராஸ்காரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. எஸ்.ஆர் புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.ஜகதீஸ் தயாரிக்கும் இப்படத்தில் மலையாள நடிகர் ஷேன் நிகாம் மற்றும் கலையரசன் நாயகர்களாக நடிக்கிறார்கள்.
புதுமையான த்ரில்லர் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் நாயகியாக நிஹாரிகா ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மூத்த சகோதரரான நாகேந்திர பாவின் மகளான நிஹாரிகா, விஜய் சேதுபதி மற்றும் கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். இவர் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார்.
ஒரு சிறு ஈகோ, ஒருவனின் வாழ்வை எந்த எல்லைக்கு கூட்டிச்செல்லும் என்பதே இப்படத்தின் மையம். ரங்கோலி படம் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாக தீட்டிய, இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையை புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைக்கதையாக படைத்துள்ளார்.
மலையாளத்தில் புகழ்பெற்ற ’கும்பளாங்கி நைட்ஸ்’, ’ஆர் டி எக்ஸ்’, ’இஷ்க்’ படப்புகழ் நடிகர் ஷேன் நிகாம், இப்படம் மூலம் தமிழில் நாயகனாக அறிமுகமாகிறார். நடிகர் கலையரசன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் இணைந்து நடிக்கிறார். ஷேன் நிகாம் ஜோடியாக நிஹாரிகா நடிக்கிறார்.
தற்போது படத்தின் முன் தயாரிப்பு பணிகள் துவங்கி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பை சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க, படக்குழு திட்டமிட்டுள்ளது.
தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...