‘விவேகம்’ படத்தால் பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்துக் கொண்டிருக்கும் அஜித், தற்போது முழுழ் ஒய்வில் இருக்கிறார். இதனால் தனது அடுத்த படத்தின் அறிவிப்பை அடுத்த ஆண்டே அவர் அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இருந்தாலும், அவரது அடுத்த படமும் சிவாவுடன் தான் என்று தகவல் வெளியாகியிருப்பதோடு, அப்படத்தை கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று தயாரிக்க முன் வந்திருப்பதாகவும், சிவாவை அழைத்து அஜித் கதை ரெடி பண்ண சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஹாலிவுட் ஸ்டைலில் படம் எடுக்கிறேன், என்ற பெயரில் ரசிகர்களுக்கு புரியாத ஒரு படத்தை எடுத்து பாடம் கற்றுக்கொண்ட அஜித், இந்த முறை உள்ளூர் லோக்கல் கதையாகவே இருக்கட்டும் என்று சிவாவிடம் கூறியதோடு, ‘வீரம்’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கலாமே, என்று யோசனையும் சொல்லியிருக்கிறாராம்.
அஜிதின் ‘வீரம் 2’ ஐடியா நல்லா தானே இருக்கு, கதைக்கும் ரொம்ப யோசிக்க வேண்டியதில்லை, பழைய வீரம் கதையை சற்று தூசு தட்டினாலே போதுமே!, என்று எண்ணிய சிவாவும் அஜித்தின் ஐடியாவுக்கு ஓகே சொல்லி வேலையை ஆரம்பித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
எது எப்படியோ, இந்த முறையாவது அஜித் - சிவா கூட்டணி வெற்றி பெற்றால் சரி.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...