‘கொம்பன்’, ‘மருது’, ‘விருமன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் முத்தையா, தனது மகன் விஜய் முத்தையாவை ஹீரோவாக வைத்து படம் இயக்குகிறார். இதில் விஜய் முத்தையாவுக்கு ஜோடியாக பிரிகிடா சகா என்ற புதுமுக நடிகை நடிக்கிறார். இவர்களுடன் மேலும் பல புதுமுகங்கள் இப்படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளனர்.
கே.கே.ஆர். சினிமாஸ் சார்பில் ரமேஷ் பாண்டியன் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். வீரமணி கணேசன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
இளைஞர்களை மையப்படுத்திய உணர்ச்சிகரமான திரைப்படமாக உருவாக உள்ள இப்படத்தின் கதை மதுரை மாவட்டத்தை சுற்றி நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தில் இடம்பெறும் மிக முக்கியமான சண்டை காட்சி ஒருவாரம் படமாக்க திட்டமிட்டிருப்பதோடு, அதற்காக பெரும் பொருட்செலவில் சினிமா திரையரங்கம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
ஸ்ரீ சித்தி விநாயகா மூவி மேக்கர் சார்பில் டி...
'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும் பேசும்' என்பார்கள்...
இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...