‘கொம்பன்’, ‘மருது’, ‘விருமன்’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் முத்தையா, தனது மகன் விஜய் முத்தையாவை ஹீரோவாக வைத்து படம் இயக்குகிறார். இதில் விஜய் முத்தையாவுக்கு ஜோடியாக பிரிகிடா சகா என்ற புதுமுக நடிகை நடிக்கிறார். இவர்களுடன் மேலும் பல புதுமுகங்கள் இப்படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளனர்.
கே.கே.ஆர். சினிமாஸ் சார்பில் ரமேஷ் பாண்டியன் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். வீரமணி கணேசன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.
இளைஞர்களை மையப்படுத்திய உணர்ச்சிகரமான திரைப்படமாக உருவாக உள்ள இப்படத்தின் கதை மதுரை மாவட்டத்தை சுற்றி நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தில் இடம்பெறும் மிக முக்கியமான சண்டை காட்சி ஒருவாரம் படமாக்க திட்டமிட்டிருப்பதோடு, அதற்காக பெரும் பொருட்செலவில் சினிமா திரையரங்கம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பை ஒரே கட்டமாக முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...