Latest News :

போதைப்பொருல் கடத்தல் வழக்கில் சிக்கிய தயாரிப்பாளர்! - ‘மங்கை’ படம் ரிலீஸ் ஆகுமா?
Tuesday February-27 2024

கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப் பொருள்களை கடத்த முயன்ற கும்பல், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது. மேலும், அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றும், கும்பலின் தலைவனாகச் செயல்பட்டவர் ஜாபர் சாதிக் என்பது தெரிய வந்தது. இந்த ஜாபர் சாதிக் ஜே.எஸ்.எம் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தமிழ்த் திரைப்படங்களை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இயக்குநர் அமீர் இயக்கும் ’இறைவன் மிகப் பெரியன்’ என்ற படத்தை தயாரித்துக் கொண்டிருந்தவர், கயல் ஆனந்தியை கதையின் நாயகியாக வைத்து ‘மங்கை’ என்ற படத்தையும் தயாரித்திருக்கிறார். கதாநாயகியை மையப்படுத்திய இப்படம் வரும் மார்ச் மாதம் 1 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், தற்போது தயாரிப்பாளர் ஜாபர் சாதிக்,  போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கியிருப்பதால் ‘மங்கை’ படம் வெளியாவது சிக்கல் என்று கூறப்படுகிறது.

 

‘மங்கை’ படத்தின் மூலம் தனது சினிமா வாழ்க்கை ஒருபடி மேலே முன்னேறியிருக்கிறது, என்றெல்லாம் பேசிய நடிகை கயல் ஆனந்தி, தற்போது அப்படம் வெளியாவதே சிக்கல் என்ற நிலை வந்திருப்பதால் ரொம்பவே அப்செட்டாகிவிட்டாராம். மேலும், இயக்குநர் அமீர் இயக்கி வந்த ‘இறைவன் மிகப் பெரியவன்’ படத்தின் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுட்டதாம்.

 

Kayal Anandhi

Related News

9557

ராஜ் டிஜிட்டல் டிவி ஓடிடி தளத்தில் வெளியாகும் ‘செம்பியன் மாதேவி’!
Wednesday March-26 2025

8 ஸ்டுடியோஸ் பிலிம் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பத்மநாபன் லோகநாதன் தயாரிப்பில், லோக பத்மநாபன் எழுதி இயக்கி இசையமைத்து நாயகனாக நடித்த படம் ‘செம்பியன் மாதேவி’...

பிரதீப் ரங்கநாதன் - மமிதா பைஜு நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது!
Wednesday March-26 2025

‘லவ் டுடே’ மற்றும் ‘டிராகன்’ வெற்றியை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்திருக்கும் பிரதீப் ரங்கநாதனுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது...

திருச்சி மற்றும் மதுரையில் மாணவர்களுடன் நடனம் ஆடிய நடிகர் விக்ரம்!
Wednesday March-26 2025

எச்.ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிப்பில் இயக்குநர் எஸ்...

Recent Gallery