Latest News :

”ஆக்‌ஷன் ஹீரோவானது நம்பமுடியாத அனுபவம்” - ‘ஜோஷ்வா’ நாயகன் வருண்
Tuesday February-27 2024

விஜயின் ‘தலைவா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான வருண், ‘ஒரு நாள் இரவில்’, ‘போகன்’, ‘வனமகன்’ உள்ளிட்ட பல படங்கலில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர், ‘பப்பி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், தற்போது கெளதம் மேனம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ படத்தின் மூலம் ஆக்‌ஷன் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.

 

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ படம் வரும் மார்ச் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், அப்படத்திம் நடித்த அனுபவம் பற்றி நாயகன் வருண் கூறுகையில், “கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற புகழ்பெற்ற இயக்குநருடன் இணைந்து பணியாற்றுவது எந்தவொரு ஆர்வமுள்ள நடிகருக்கும் கனவு. அது எனக்கு நிறைவேறி இருக்கிறது. எல்லா ஹீரோக்களும் அவரது இயக்கத்தில் உருவாகும் ஸ்டைலிஷான காதல் கதையில் தான் நடிக்க விருப்பப்படுவார்கள். ஆனால், அவர் என்னை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது எனக்கு மகிழ்ச்சியான சர்ப்ரைஸாக இருந்தது.   அவருடன் பணிபுரிந்தது எனக்கு முழுமையான ஆசீர்வாதம். மேலும், எனக்கு படப்பிடிப்பு தளத்தில் எண்ணற்ற ஃபேன் பாய் தருணங்களும் இருந்தது. சூர்யா சார், அஜித் சார், கமல் சார் போன்ற தமிழ் சினிமாவின் ஐகானிக் கதாநாயகர்களை கெளதம் சாரின் திரைப்படங்களில் பிரமிப்புடன் பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் ஆக்‌ஷன் கதாநாயகனாக நான் நடித்தது உண்மையிலேயே நம்பமுடியாத அனுபவமாக இருந்தது.'ஜோஷ்வா இமை போல் காக்க' ஆக்‌ஷன் பிரியர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆக்‌ஷன் டைரக்டர் யானிக் பென் மற்றும் அவரது குழுவினரின் பணியை ஒவ்வொரு ஃப்ரேமிலும் பார்க்க முடியும். என்னுடைய சக நடிகர்களான ராஹே, கிருஷ்ணா மற்றும் பிறரின் அசைக்க முடியாத ஆதரவிற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

 

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் டாக்டர்.ஐசரி கே.கணேஷ் தயாரித்திருக்கும் இப்படத்தில் ராஹே கதாநாயகியாக நடிக்க, நடிகர் கிருஷ்ணா முதல் முறையாக வில்லனாக நடித்திருக்கிறார்.

 

எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கார்த்திக் இசையமைத்திருக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு செய்ய, குமார் கங்கப்பன் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். மதன் கார்கி, விவேக், விக்னேஷ் சிவன், சூப்பர் சுபு, கானா குணா ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். யானிக் பென் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

Related News

9558

எழுத்தாளரான அஜயன் பாலா திரைப் படைப்பாளியாக வருவது மகிழ்ச்சி! - சீமான் பாராட்டு
Saturday October-11 2025

எழுத்தாளரும், தமிழ் இலக்கிய சிந்தனையாளருமான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் 'மைலாஞ்சி' திரைப்படத்தில் 'கன்னி மாடம்' பட புகழ் நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை க்ருஷா குரூப் நடித்திருக்கிறார்...

இளம் நெஞ்சங்களையும், இசை பிரியர்களையும் கொள்ளை கொண்ட “நீ என்னை நெருங்கையிலே...” பாடல்!
Saturday October-11 2025

திரைப்பட பாடல்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்த தென்னிந்திய மக்கள் தற்போது சுயாதீன இசை ஆல்பங்கள் மற்றும் தனிப்பாடல்களுக்கு பெரும் முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளனர்...

Recent Gallery