Latest News :

”ஆக்‌ஷன் ஹீரோவானது நம்பமுடியாத அனுபவம்” - ‘ஜோஷ்வா’ நாயகன் வருண்
Tuesday February-27 2024

விஜயின் ‘தலைவா’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான வருண், ‘ஒரு நாள் இரவில்’, ‘போகன்’, ‘வனமகன்’ உள்ளிட்ட பல படங்கலில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர், ‘பப்பி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், தற்போது கெளதம் மேனம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ படத்தின் மூலம் ஆக்‌ஷன் ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.

 

ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாக இருக்கும் ‘ஜோஷ்வா இமை போல் காக்க’ படம் வரும் மார்ச் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள நிலையில், அப்படத்திம் நடித்த அனுபவம் பற்றி நாயகன் வருண் கூறுகையில், “கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற புகழ்பெற்ற இயக்குநருடன் இணைந்து பணியாற்றுவது எந்தவொரு ஆர்வமுள்ள நடிகருக்கும் கனவு. அது எனக்கு நிறைவேறி இருக்கிறது. எல்லா ஹீரோக்களும் அவரது இயக்கத்தில் உருவாகும் ஸ்டைலிஷான காதல் கதையில் தான் நடிக்க விருப்பப்படுவார்கள். ஆனால், அவர் என்னை ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றியது எனக்கு மகிழ்ச்சியான சர்ப்ரைஸாக இருந்தது.   அவருடன் பணிபுரிந்தது எனக்கு முழுமையான ஆசீர்வாதம். மேலும், எனக்கு படப்பிடிப்பு தளத்தில் எண்ணற்ற ஃபேன் பாய் தருணங்களும் இருந்தது. சூர்யா சார், அஜித் சார், கமல் சார் போன்ற தமிழ் சினிமாவின் ஐகானிக் கதாநாயகர்களை கெளதம் சாரின் திரைப்படங்களில் பிரமிப்புடன் பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் ஆக்‌ஷன் கதாநாயகனாக நான் நடித்தது உண்மையிலேயே நம்பமுடியாத அனுபவமாக இருந்தது.'ஜோஷ்வா இமை போல் காக்க' ஆக்‌ஷன் பிரியர்களுக்கு நிச்சயம் ஒரு விருந்தாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆக்‌ஷன் டைரக்டர் யானிக் பென் மற்றும் அவரது குழுவினரின் பணியை ஒவ்வொரு ஃப்ரேமிலும் பார்க்க முடியும். என்னுடைய சக நடிகர்களான ராஹே, கிருஷ்ணா மற்றும் பிறரின் அசைக்க முடியாத ஆதரவிற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

 

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் டாக்டர்.ஐசரி கே.கணேஷ் தயாரித்திருக்கும் இப்படத்தில் ராஹே கதாநாயகியாக நடிக்க, நடிகர் கிருஷ்ணா முதல் முறையாக வில்லனாக நடித்திருக்கிறார்.

 

எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கார்த்திக் இசையமைத்திருக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு செய்ய, குமார் கங்கப்பன் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். மதன் கார்கி, விவேக், விக்னேஷ் சிவன், சூப்பர் சுபு, கானா குணா ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். யானிக் பென் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

Related News

9558

”என் படங்களுக்கு திரையரங்குகளை கொடுங்கள்” - நடிகர் மகேந்திரன் கோரிக்கை
Thursday December-25 2025

எஸ்.வி.எம் ஸ்டுடியோஸ் சார்பில் ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள படம்  ‘த்ரிகண்டா’...

பிரபலங்களின் சுவாரஸ்ய தகவல்களோடு உருவாகியுள்ள ஆர்.எம்.வீரப்பன் பற்றிய ஆவணப்படம்!
Wednesday December-24 2025

தமிழ்நாட்டு அரசியல் மற்றும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆர்...

சூடுபிடித்த தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்! - தமிழ்குமரனுக்கு அதிகரித்து வரும் ஆதரவு
Wednesday December-24 2025

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கான 2026 முதல் 2029ம் ஆண்டுக்கான  நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான சங்க தேர்தல் வரும் பிப்ரவரி 22, 2026 அன்று நடைபெற உள்ளது...

Recent Gallery