Latest News :

கே.எஸ்.ரவிக்குமாரை காத்திருக்க வைத்த ’பள்ளிப் பருவத்திலே’
Thursday October-12 2017

விகேபிடி கிரியேஷன்ஸ் சார்பில் டி.வேலு தயாரிப்பில் வாசுதேவ் பாஸ்கர் எழுதி இயக்கியுள்ள படம் ‘பள்ளிப் பருவத்திலே’. இப்படத்தில் நந்தன் ராம் ஹீரோவாக அறிமுகமாக ஹீரோயினாக வென்பா நடித்துள்ளார். இவர்களுடன் ஆர்.கே.சுரேஷ், பொன்வன்னன், ஊர்வசி, கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

 

இப்படத்தின் மிக முக்கியமான வேடத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் நடித்திருக்கிறார். பள்ளி தலைமை ஆசியர் வேடத்தில் நடித்துள்ள கே.எஸ்.ரவிக்குமார், இப்படத்தின் கதையை கேட்டதும் ஓகே சொல்லி நடித்தவர், இயக்குநர் வாசுதேவ் பாஸ்கர் காட்சிகளை படமாக்கிய போதே, இப்படம் தன்னை நடிகராக வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லும் என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். பிறகு அவர் நடித்த காட்சிகளை பார்த்தவர், இயக்குநர் வாசுதேவ் பாஸ்கரை பாராட்டியதோடு, இந்த படத்திற்காக சம்பளமாக தான் வாங்கிய காசோலையை திருப்பிக் கொடுத்துவிட்டாராம். அந்த அவரது வேடம் மிக சிறப்பாக வந்திருக்கிறதாம்.

 

இதை கே.எஸ்.ரவிக்குமார் மட்டும் சொல்லவில்லை, ‘பள்ளிப் பருவத்திலே’ படத்தின் கதையையும், கே.எஸ்.ரவிக்குமாரின் வேடம் குறித்தும் அறிந்த அனைவரும் சொல்வதோடு, இந்த படத்தில் கே.எஸ்.ரவிக்குமாருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, என்று கூற, தற்போது கே.எஸ்.ரவிக்குமார் விருதுக்காக காத்திருக்கிறாராம்.

 

கே.எஸ்.ரவிக்குமார் மட்டுமல்ல, படத்தில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகளும் இப்படத்தின் கதையை கேட்டதம் ஓகே சொல்லியதோடு, இப்படம் நிச்சயம் ஹிட் படம் மட்டும் அல்ல, விமர்சனம் ரீதியாக சிறந்த படமாகவும் வரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.

 

சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தை நவம்பர் மாதம் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

Related News

957

மக்கள் என் கருத்துகளை ஏற்றுக்கொண்டனர் - இயக்குநர் பா.இரஞ்சித் பெருமிதம்
Sunday September-14 2025

லேர்ன் & டீச் புரொடக்‌ஷன்ஸ் ( Learn & Teach Production) சார்பில் எஸ்...

கதை தேர்வு மூலம் வியக்க வைக்கும் அர்ஜூன் தாஸ்!
Saturday September-13 2025

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...

சக்தி ஃபிலிம் பேக்டரி நிறுவனத்துடன் வெற்றியை கொண்டாடிய ‘காந்தி கண்ணாடி’ படக்குழு!
Saturday September-13 2025

இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...

Recent Gallery