Latest News :

லீக்கானது ‘மெர்சல்’ கதை - இது தான் கதையாம்!
Thursday October-12 2017

விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளியாக உள்ள ‘மெர்சல்’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், கதை இப்படி இருக்கும், அப்படி இருக்கும் என்று பலர் ஆரூடம் சொன்னாலும், கதை குறித்து படக்குழுவினர் தரப்பில் இதுவரை எந்த தகவலும் கூறப்படவில்லை.

 

சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குநர் அட்லி கூட, மெர்சல் கொண்டாட்ட தீபாவளியாக இருக்கும், உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும், என்று சொன்னாரே தவிர படம் குறித்து வேறு எந்த தகவலையும் அவர் தெரிவிக்கவில்லை.

 

இந்த நிலையில், மெர்சல் படத்தின் கதை இதுதான், என்று கூறி சமூக வலைதளங்களில் கதை ஒன்று உலா வருகிறது.

 

அதில், ”சென்னையில் மருத்துவராக இருக்கும் விஜய் ஒரு ஆய்வு கூட்டத்தில் கலந்துக்கொள்ள அமெரிக்கா செல்கின்றார்.

 

அந்த கூட்டத்தில் தன்னை போலவே இருக்கும் மேஜிக் செய்யும் விஜய்யை சந்திக்கின்றார், அவரை பின் தொடர்ந்து மருத்துவர் விஜய் செல்ல, இருவரும் சகோதரர்கள் என்று தெரிய வருகின்றது.

 

பிறகு பளாஷ்பேக்கில் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் விஜய்க்கு இரட்டை குழந்தை பிறக்க, அதில் ஒரு குழந்தையை ராஜஸ்தானில் இருக்கும் ஒருவருக்கு கொடுக்கின்றார்.

 

ஒரு குழந்தையை இவர்கள் வளர்க்க, அப்போது எஸ்.ஜே.சூர்யா அந்த ஊர் கிராம மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஒரு சில வேலைகளை செய்ய, இதை அப்பா விஜய் எதிர்க்கின்றார்.

 

இதனால், அப்பா விஜய்யை எஸ்.ஜே.சூர்யா கொல்ல, அதை தொடர்ந்து கோவை சரளா ஒரு விஜய்யை தூக்கி சென்று சென்னையில் வளர்க்கின்றார், இந்த உண்மைகளை எல்லாம் தெரிந்துக்கொண்டு இரண்டு விஜய்யும் ஆடும் ருத்ரதாண்டவமே மீதிக்கதை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தற்போது வைரலாக பரவும் இந்த கதை தான் மெர்சல் படத்தின் கதையா? அல்லது வதந்தியா? என்பது இன்னும் 6 நாட்களில் தெரிந்துவிடும், பார்ப்போம்.

Related News

958

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

Recent Gallery