Latest News :

தாடி பாலாஜி விவகாரத்தில் புது திருப்பம் - போலீஸ் விசாரணையில் சிக்கிய நித்யா
Thursday October-12 2017

காமெடி நடிகர் தாடி பாலஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தன்னை அடித்து கொடுமை படுத்துவதாக நித்யா தாடி பாலாஜி மீது போலீசில் புகார் அளித்தார்.

 

இதையடுத்து நித்யா, அவரது ஆண் நண்பர்களுடன் சேர்ந்துக் கொண்டு தன்னை மிரட்டுவதாக தாடி பாலாஜி போலீசில் புகார் அளித்தார். இந்த விவகாரம் குறித்து போலீசார் சம்மந்தப்பட்ட பகுதி காவல் நிலையங்களில் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில், பாலாஜியிடம் இருந்து விவாகரத்து கேட்டு நித்யா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

 

இந்த நிலையில், தாடி பாலாஜி குறித்து வீடியோ ஒன்று வெளியானது. அதில், நித்யா மற்றும் குழந்தையை அறை ஒன்றில் அடைத்து, அறைக்கு வெளியே பாலாஜி தீ வைப்பது போல காட்டப்பட்டிருந்தது. மேலும், குழந்தையிடம் தகாத முறையில் நடந்ததாகவும், கடுமையான சொற்களை பயன்படுத்தி திட்டுவது போன்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வீடியோ மற்றும் தாடி பாலாஜி, நித்யா அவரது ஆண் நண்பர்கள் என்று கூறப்படும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட இரண்டு பேர் என மொத்தம் நான்கு பேரிம் போலீசார் தனி தனியாக விசாரணை நடத்தினார்கள்.

 

இதில், நித்யாவிடம் நடத்திய விசாரணையில் அவர், தனது ஆண் நண்பருக்கு செல்போன் பரிசு வழங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் விசாரணையின் போது அவர் குற்றச்சாட்டுக்களை மறைத்துள்ளார். ஆனால், அவர் நித்யாவிடம் செல்போனில் பேசியிருப்பதை விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

 

இந்த விவகாரத்தில் தாடி பாலாஜி கெட்டவரைப் போல காட்டப்பட்டு வந்த நிலையில், போலீசாரின் தீவிர விசாரணையினால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இனி நடக்க இருக்கும் விசாரணையில் எந்த மாதிரியான உண்மைகள் வெளியாகப் போகிறதோ! என்ற எதிர்ப்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

Related News

959

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

Recent Gallery