Latest News :

”அதிர்ச்சியாக இருக்கிறது! இது உண்மைதானா?” - நடிகர் வசந்த் ரவி பதிவால் பரபரப்பு
Tuesday March-19 2024

வசந்த் ரவி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ‘பொன் ஒன்று கண்டேன்’. யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருப்பதோடு, தனது ஒய்.எஸ்.ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில், ஜியோ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை ‘கண்டநாள் முதல்’, ‘கண்ணாமூச்சி ஏனடா’ படங்களை இயக்கிய பிரியா இயக்கியுள்ளார். 

 

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து படத்தின் வெளியீட்டுக்காக படக்குழு காத்திருக்கும் நிலையில், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இப்படம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும், என்று புரோமோவுடன் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பால் படக்குழு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது. காரணம், இது பற்றிய எந்த ஒரு தகவலும் அவர்களுக்கு தெரியவில்லை என்பது தான்.

 

இது குறித்து தனது அதிருப்தியை தெரிவித்துள்ள நடிகர் வசந்த் ரவி, ஜியோ ஸ்டுடியோவின் இத்தகைய செயலுக்கு வெளிப்படையாக கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்டுள்ள பதிவில், “அதிர்ச்சியாக இருக்கிறது! இது உண்மைதானா? ஜியோ ஸ்டுடியோஸ் எனும் இவ்வளவு பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து இப்படி ஒரு அறிவிப்பா? ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் நேரடியாக டிவியில் ஒளிபரப்பாகும் என்ற இந்த அறிவிப்பு அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, யுவன் சங்கர் ராஜா, இயக்குநர் பிரியா என படம் தொடர்பான எங்கள் யாரின் அனுமதியும் இல்லாமல் வெளியாகி இருப்பது மிகவும் வேதனையாகவும், வருத்தமளிப்பதாகவும் இருக்கிறது. இந்த படத்திற்காக கடுமையாக நாங்கள் உழைத்துள்ளோம். இந்த அறிவிப்பு குறித்து எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் எதுவுமே தெரியாது. இந்த படத்தை டிவியில் ஒளிபரப்புவோம் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டு எங்களுக்கு மரியாதை செலுத்தியதற்கு மிக்க நன்றி ஜியோ ஸ்டுடியோஸ்.

 

ஒரு நடிகனுக்கோ அல்லது கலைஞனுக்கோ வணிக ரீதியான தயாரிப்பு நிறுவனத்தின் முடிவுகளில் தலையிட முடியாது என்பது உண்மை தான். ஆனால், இதுபோன்ற அறிவிப்புகள் நேரடியாகவோ அல்லது படக்குழு மூலமாகவோ சொல்வதே சரியானது. இப்படி சமூகவலைதள பதிவுகள் மூலமாக எங்களுக்கும் சேர்த்து அறிவிப்பாக வெளியிடுவது சரியல்ல.” என்று தெரிவித்துள்ளார்.

 

நடிகர் வசந்த் ரவியின் இந்த பதிவால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related News

9605

’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரை பிரபலங்கள்
Thursday July-03 2025

தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2 ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு ’தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்’ என்று சொல்லக்கூடிய ‘டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்’ (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது...

பெரிய டங்களில் சட்ட விரோத செயல்கள் தான் பெரிதாகக் காட்டப்படுகின்றன - ’மகேஸ்வரன் மகிமை’ பட விழாவில் கே.ராஜன் பேச்சு
Tuesday July-01 2025

எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...

’தேசிங்குராஜா 2’-வின் வெற்றிக்கு விமல் தான் முக்கிய காரணமாக இருக்கப் போகிறார் - இயக்குநர் எழில் உறுதி
Tuesday July-01 2025

நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...

Recent Gallery