இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், ராம்சரண் நடிப்பில் உருவாக இருக்கும் பிரமாண்டமான காவியத் திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்பட வெற்றியின் மூலம் உலகளவில் பிரபலமடைந்திருக்கும் நடிகர் ராம்சரணும், ‘புஷ்பா’ திரைப்படத்தின் வெற்றியின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் சுகுமாரும் இணைந்திருப்பது ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் இருவரும் இணையும் திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. பெயரிடப்படாத இந்த திரைப்படம் 2025 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் பிரம்மாண்டமாக வெளியிடுவதை இலக்காகக் கொண்டிருக்கிறது.
'ரங்கஸ்தலம்' படத்தின் வெற்றிக்குப் பிறகு ராம்சரண் - சுகுமார் -மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் இசையமைப்பாளர் டிஎஸ்பி கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது.
இந்தத் திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.
தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் பிலிம்ஸ் (The Show Must Go On & Black Madras Films) நிறுவனங்கள் சார்பில், ஆண்ட்ரியா ஜெரேமியா , எஸ்...
நிஜம் சினிமா தயாரிப்பில் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’...
அக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி மற்றும் குட் ஷோ (Axess Film Factory & Good Show) பட நிறுவனங்கள் சார்பில் தேவ், கேவி துரை இணைந்து தயாரிக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...