நானி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘தசரா’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, நானியின் திரைப்படங்களில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படமாக அமைந்த நிலையில், தசரா இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலாவுடன் நடிகர் நானி மீண்டும் இணைந்துள்ளார்.
நானியின் 33 வது திரைப்படமாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. தற்காலிகமாக ‘நானி 33’ என்று அழைக்கப்படும் இப்படத்தை ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரிக்கிறார்.
தசரா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஸ்ரீகாந்த் ஒடேலா, முதல் படத்திலேயே அதிக வசூலை குவித்து நல்ல வரவேற்பை பெற்றார். தனது முதல் படத்திலேயே நானியை இதுவரை யாரும் பார்த்திராத அளவுக்கு வித்தியாசமாக வெளிப்படுத்தியிருந்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக நானியுடன் வித்தியாசமான முயற்சியை மேற்கொள்ள இருக்கிறார், என்பதை படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளிப்படுத்துகிறது.
புதிய படம் தொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டரில் ரத்தம் தெறிக்க சிவப்பு நிறம் கொண்டிருக்கிறது. இதன் பின்னணியில் நானியின் முகம் மாசாக காட்சியளிக்கிறது. இத்துடன் அவர் சிகரெட் பிடிக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பான போஸ்டரில், ”தலைவராக இருக்க அடையாளம் தேவையில்லை” என்ற வாசகம் இடம்பெற்று இருக்கிறது.

இதன் மூலம், இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா, மீண்டும் நானியை அதிரடி ஆக்ஷன் மற்றும் பலம் வாய்ந்த கதாபாத்திரமாக உருவாக்க ரெடியாகிவிட்டார் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்த போஸ்டர், சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
இந்த படம் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருக்கிறது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...