Latest News :

’புஷ்பா 2’-வின் டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Tuesday April-02 2024

இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதோடு, அதன் இரண்டாம் பாகமான ‘புஷ்பா : தி ரூல்’ படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்திய அளவில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களின் வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் ‘புஷ்பா : தி ரூல்’ படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மிக பிரமாண்டமான முறையில் தயாரித்திருக்கிறது.

 

வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘புஷ்பா : தி ரூல்’ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று படத்தின் டீசர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, நடிகர் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளான ஏப்ரல் 8 ஆம் தேதி ‘புஷ்பா : தி ரூல்’ படத்தின் டீசர் வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த பான்-இந்திய படத்தின் சீக்வல் மூலம் வெள்ளித்திரையில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த உள்ளார் அல்லு அர்ஜுன். தெலுங்கு சினிமாவில் மட்டுமல்லாது, இந்திய சினிமாவிலும் இந்த  'புஷ்பா: தி ரூல்' படம் முக்கியமான ஒன்று. நடிகர் ஃபஹத் ஃபாசில் பழிவாங்கும் வஞ்சம் கொண்ட கதபாத்திரம் மூலம் இந்த சீக்வலிலும் அல்லு அர்ஜூனுடன் இணைகிறார். 

 

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், மிர்ஸ்லோ குபா ப்ரோஸெக் ஒளிப்பதிவில், எஸ்.ராமகிருஷ்ணா மற்றும் என்.மோனிகாவின் தயாரிப்பு வடிவமைப்பில் உருவாகியிருக்கும் ‘புஷ்பா : தி ரூல்’ சினிமா ரசிகர்களுக்கான மிகப்பெரிய விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Related News

9649

’வெள்ளகுதிர’ இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா
Sunday November-09 2025

நிஜம் சினிமா தயாரிப்பில் சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில்  உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’...

குடும்ப படம் தான், ஆனால் பல ஜானர்களின் பாதிப்பு இருக்கும் - ‘மிடில் கிளாஸ்’ படம் பற்றி இயக்குநர் கிஷோர் எம்.ராமலிங்கம்
Sunday November-09 2025

அக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி மற்றும் குட் ஷோ (Axess Film Factory & Good Show) பட நிறுவனங்கள் சார்பில் தேவ், கேவி துரை இணைந்து தயாரிக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

‘அங்கம்மாள்’ மூலம் கதையின் நாயகியான நடிகை கீதா கைலாசம்
Sunday November-09 2025

கிராமத்தில் வசிக்கும் வயதான பெண்மணி அங்கம்மாளின் ஆடை சுதந்திரத்தை மையமாக வைத்து எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித் துணி’ என்ற  சிறுகதையை மையமாக கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘அங்கம்மாள்’...

Recent Gallery