கதாநாயகிகளை மையப்படுத்திய கதைக்களங்களில் தொடர்ந்து வெற்றிக் கொடுத்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடம் பிடித்ததோடு, தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி திரைப்படங்களிலும் தனது நடிப்பு மூலம் கவனம் ஈர்த்து வருகிறார்.
இந்த நிலையில், ‘உத்தராகாண்டா’ என்ற படத்தின் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட சினிமாவில் கால் பதிக்கிறார். இந்த படத்தில், கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் டாக்டர்.சிவராஜ் குமார் மற்றும் டாலி தனஞ்செயா ஆகியோர் நடிக்கிறார்கள். இதில், டாலி தனஞ்செயாவுக்கு ஜோடியாக துர்கி என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இவர்களுடன் மலையாள நடிகர் விஜய் பாபு, ரங்காயண ரகு, சைத்ரா ஜே. ஆச்சார், உமா ஸ்ரீ, யோகராஜ் பட் , கோபாலகிருஷ்ண தேஷ் பாண்டே உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
கே.ஆர்.ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கார்த்திக் கவுடா மற்றும் யோகி ஜி.ராஜ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ரோஹித் பதகி இயக்குகிறார். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரபல பாலிவுட் இசையமைப்பாளரும், பாடகருமான அமித் திரிவேதி இசையமைக்கிறார். கலை இயக்குநராக விஸ்வாஸ் காஷ்யப் பணியாற்றுகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷின் அறிமுகத்தால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு பிஜய்ப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று வருகிறது.
பத்திரிகையாளராக பயணத்தை துவங்கி, நடிகர் விஜய்யின் மக்கள் தொடர்பாளராக உயர்ந்து, அடுத்த கட்டமாக விஜய் நடித்த 'புலி' படத்தை தயாரித்து திரையுலகின் கவனத்தை ஈர்த்த பி டி செல்வகுமார், 10 வருடங்களுக்கு முன் 'கலப்பை மக்கள் இயக்கம்' என்ற அமைப்பை துவங்கி ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார்...
அறிமுக இயக்குநர் எஸ்.விஜய் குமார் இயக்கத்தில், தேனிசை தென்றல் தேவா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாண்புமிகு பறை’...
தன்னம்பிக்கைக்கும் விடா முயற்சிக்கும் முன்னுதாரணமாக, வெற்றி நாயகனாக திகழும் நடிகர் அருண் விஜய் இன்று (19...