நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். ஜெயம் ரவியும் அவ்வபோது அவர்களை சந்தித்து உற்சாகமளித்து வருகிறார்.
இந்த நிலையில், சென்னை எம்.ஜி.ஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்த, சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த 33 வயது இளைஞர் ராஜா என்பவர், உடல் நலக்குறைவால் காலமானார். இவர் ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நற்பணிகளை செய்து வந்தார்.
தனது ரசிகரின் திடீர் மரணம் பற்றி அறிந்த நடிகர் ஜெயம் ரவி, மறைந்த ராஜாவின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். மேலும், குடும்பத்திற்கு எந்த உதவியானாலும் தான் செய்து தருவதாக உறுதியளித்தார்.

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ பேனரில் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் சோமிதரன் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நீளிரா’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் என்...
மேக்ஸ் ஃபேஷன் நிறுவனம், சென்னை வளசரவாக்கத்தில் தனது புதிய கிளையைத் தொடங்கியதன் மூலம் ஃபேஷன் மற்றும் திரைப்பட கலாச்சாரத்தை ஒன்றிணைத்தது...