நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். ஜெயம் ரவியும் அவ்வபோது அவர்களை சந்தித்து உற்சாகமளித்து வருகிறார்.
இந்த நிலையில், சென்னை எம்.ஜி.ஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்த, சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த 33 வயது இளைஞர் ராஜா என்பவர், உடல் நலக்குறைவால் காலமானார். இவர் ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நற்பணிகளை செய்து வந்தார்.
தனது ரசிகரின் திடீர் மரணம் பற்றி அறிந்த நடிகர் ஜெயம் ரவி, மறைந்த ராஜாவின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். மேலும், குடும்பத்திற்கு எந்த உதவியானாலும் தான் செய்து தருவதாக உறுதியளித்தார்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...
இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ஜீ 5 - ல் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி வெளியான ’ரேகை’ இணையத் தொடர் ரசிகர்களின் பெரும் வரவேற்பில், வெளியான சில நாட்களில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது...
மருதம் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், தினேஷ் கலைசெல்வன் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘மகாசேனா’...