நடிகர் ஜெயம் ரவியின் ரசிகர்கள், ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். ஜெயம் ரவியும் அவ்வபோது அவர்களை சந்தித்து உற்சாகமளித்து வருகிறார்.
இந்த நிலையில், சென்னை எம்.ஜி.ஆர் நகர் ஜெயம் ரவி ரசிகர் மன்றத்தின் தலைவராக இருந்த, சென்னை கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்த 33 வயது இளைஞர் ராஜா என்பவர், உடல் நலக்குறைவால் காலமானார். இவர் ஜெயம் ரவி ரசிகர் மன்றம் சார்பில் பல்வேறு நற்பணிகளை செய்து வந்தார்.
தனது ரசிகரின் திடீர் மரணம் பற்றி அறிந்த நடிகர் ஜெயம் ரவி, மறைந்த ராஜாவின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். மேலும், குடும்பத்திற்கு எந்த உதவியானாலும் தான் செய்து தருவதாக உறுதியளித்தார்.
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...
நடன இயக்குநர் சதீஷ், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘கிஸ்’...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம், திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமல்லாமல், அண்மையில் வெளியான அதன் ‘மோனிகா’ பாடல் மூலமாக புதிய விளம்பர உத்தி ஒன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது...