‘ராக்கெட் பாய்ஸ்’ மற்றும் ‘ஃபார்சி’ போன்ற திரைப்படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்து கவனம் ஈர்த்த நடிகை ரெஜினா கசாண்டரா, தற்போது அஜித்தின் ‘விடாமுயற்சி’, நவாசுதீன் சித்திக் நடிப்பில் உருவாகி வரும் ’செக்ஷன் 108’ படங்களில் நடித்து வருவதோடு, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். நடிப்பில் பிஸியாக இருந்தாலும், சமூக பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு வருகிறார்.
அந்த வகையில், சமீபத்தில் அழகிய புடவையில் அசத்தலாக தூய்மை பணியில் ஈடுபட்ட ரெஜினா, தற்போது பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக SUP மெரினா கிளப் உடன் கைகோர்த்துள்ளார்.
இது குறித்து கூறிய நடிகை ரெஜினா கசாண்ட்ரா, “எனக்கு மிகவும் பிடித்த விஷயம் துடுப்பு ஏறுதல் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதற்காக SUP மெரினா கிளப் -ஐ சேர்ந்த குழுவினரோடு இணைந்து கொண்டேன். அவர்களின் இந்த சமூக முன்னெடுப்பு எனக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. இந்த பணியில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள முக்கிய காரணமாக இருந்தது 12 வயதான சிறுவன் அனிஷ் தான். இந்த குழுவை வழிநடத்தும் அனிஷ் என்னை இதில் கலந்து கொள்ள ஊக்கமளித்தார்.

கடற்கரை மற்றும் நீர்நிலைகளை குப்பை கிடங்காக மாற்றிவிட கூடாது என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. சுற்றுச்சூழலில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். நீர் நிலைகள் நமக்கு அத்தியாவசியமானவை, அதை கலங்கடிக்க வேண்டாம். இந்த பணி மிகவும் தேவையான ஒன்று என நினைத்தேன். இந்த குழுவினரோடு இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது.” என்றார்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...
நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி, ஜி...
எம். ஜி. ஆர். சிவாஜி அகாடமி என்ற தலைப்பில் பிரபல மக்கள் தொடர்பாளர் டைமண்ட் பாபு, ஆண்டு தோறும் சிறந்த பட தயாரிப்பாளர், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறார்...