தமிழக அரசின் கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், கடந்த 6 ஆம் தேதி முதல் புதுப்படங்கள் வெளியாவதற்கு தடை விதித்துள்ளார். இந்த தடையால் கடந்த வாரம் சுமார் 5 க்கும் மேற்பட்ட புதிய படங்கள் வெளியாகவில்லை.
இதற்கிடையே, விஷாலின் தடை தொடர்வதால், தீபாவளிக்கு வெளியாக இருந்த விஜயின் ‘மெர்சல்’ படத்தின் ரிலிஸும் கேள்விக்குறியாக இருந்தது. அதே சமயம், விஜய் தரப்பினர், யார் எதற்காக தடை விதித்தாலும், எந்த பிரச்சினை செய்தாலும், அறிவித்தது போல 18 ஆம் தேதி மெர்சல் வெளியாகியே தீரும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
இந்த நிலையில், கூடுதலாக விதிக்கப்பட்ட கேளிக்கை வரியை நீக்க வேண்டும் என்ற வேண்டுகோள் தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் திரைப்பட உரிமையாளர்கள், தியேட்டர் அதிபர்கள் சங்க பிரதிநிதிகள் 2 கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை. தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இன்று மீண்டும் அரசுடன் தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், ”தீபாவளிக்கு இரு படங்கள் மட்டுமே ரிலீஸ். விஜய்யின் மெர்சல் படம் ரிலீசாவது உறுதியாகி இருக்கிறது. அது தவிர்த்து மேயாத மான், சென்னையில் ஒரு நாள்-2, கொடிவீரன், அறம் உள்ளிட்ட படங்களில் ஒரு படம் மட்டுமே ரிலீசாக இருக்கிறது.” என்று தெரிவித்தார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...