பாகுபலி என்ற பிரம்மாண்ட வெற்றிப் படத்தை கொடுத்த இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலி, தற்போது ஓய்வில் இருந்தாலும், அவரது அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. ஆனால், அந்த தகவல்கள் குறித்து இதுவரை எந்த கருத்தும் சொல்லாமல் இருந்த ராஜமெளலி, தற்போது தனது அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளார்.
தனது அடுத்த படத்தை சமூக அக்கறையுடன் கூடிய படமாக இயக்கப் போவதாக தெரிவித்துள்ள ராஜமெளி, அப்படத்தை டி.வி.வி.தனய்யா தயாரிக்க இருப்பதாக கூறினார். ஆனால், இதில் நடிக்க கூடிய ஹீரோ மற்றும் ஹீரோயின் உள்ளிட்ட நடிகர் நடிகைகள் யாரும் இன்னும் தேர்வு செய்யப்படவில்லையாம்.
அதேபோல், 2019 ஆம் ஆண்டின் மகேஷ் பாபுவை வைத்து ஒரு படத்தை இயக்கப் போவதாக தெரிவித்த ராஜமெளலி, அப்படத்தை கே.எல்.நாராயணா தயாரிக்க இருப்பதாகவும் கூறியுள்ளார்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...