ஏ.எம்.ஆர் கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ராஜேந்திரன் கதை எழுதி தயாரித்திருக்கும் படம் ‘பனை’. தமிழ்நாட்டில் மீண்டும் பனைத் தொழில் வளர வேன்ப்டும், பனையால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தில் நாயகனாக ஹரீஷ் பிரபாகரன் நடித்திருக்கிறார். நாயகியாக மேக்னா நடித்திருக்கிறார். இவர்களுடன் வடிவுக்கரசி, அனுபமா குமார், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, டி.எஸ்.ஆர், லாலா கடை புகழ் ரிஷா ஜேக்கப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.
திரைக்கதை, வசனம் எழுதி ஆதி.பி.ஆறுமுகம் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு மீராலால் இசையமைத்திருக்கிறார். படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார். சிவக்குமார் ரங்கசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தினா நடனக் காட்சிகளை வடிவத்திருக்கிறார். தயாரிப்பு நிர்வாகப் பணியை எம்.சிவகுமார் கவனிக்க, இணைத் தயாரிப்பு பணியை ஜெ.பிரபாகரன் கவனித்துள்ளார். மக்கள் தொடர்பாளராக வெங்கட் பணியாற்றுகிறார்.
இப்படத்தில் மூன்று பாடல்கள் மிக சிறப்பாக வைரமுத்து பாடல் வரிகளில் சிறப்பாக அமைந்துள்ளது
பனமரம் பனைமரம்
பணங்காய்க்கும் பனமரம்
பசிதீர்க்கும் மரமய்யா
பனமரம்
இது நம்ம பண்பாட்டில்
கலந்ததய்யா பனமரம்
நமக்காக நம்மோடு
வாழும்மய்யா பனமரம்
சேரன் ஆண்டகாலம் முதல்
செல்போன்கள் காலம் வரை...
என்று பனைமரத்தின் மகிமையை பற்றி எழுதியிருக்கிறார்
படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...