முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் தனது அடுத்த தமிழ் இணையத் தொடரான ‘உப்பு புளி காரம்’ பற்றிய அறிவிப்பை ஏற்கனவே அறிவித்த நிலையில், தற்போது அதன் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் மே 30 ஆம் தேதி ‘உப்பு புளி காரம்’ தொடர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
’கனா காணும் காலங்கள்’ மற்றும் ’ஹார்ட் பீட்’ தொடர் பார்வையாளர்களின் இதயங்களை வென்றது போல, இந்த ’உப்பு புளி காரம்’ தொடரும் காதல், காமெடி, குடும்ப செண்டிமெண்ட் மற்றும் பல அதிரடி திருப்பங்களுடன் அட்டகாசமான பொழுதுபோக்கை வழங்கும்.
'உப்பு புளி காரம்' ஒரு வயதான அழகான தம்பதிகள் மற்றும் அவர்களின் நான்கு குழந்தைகள் என அவர்களின் குடும்பத்தில் நிகழும் சம்பவங்களை சுற்றி பின்னப்பட்ட அழகான கதையாகும்.
இதில், நடிகர்கள் பொன்வண்ணன், வனிதா, ஆயிஷா, நவீன், அஷ்வினி, தீபிகா, கிருஷ்ணா, ஃபரினா, தீபக் பரமேஷ் மற்றும் ராஜ் அய்யப்பா உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே இடம்பெற்றுள்ளது.
விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரித்துள்ள இந்த தொடரை எம்.ரமேஷ் பாரதி இயக்கியுள்ளார். ஷேக் இசையமைக்க, பார்த்திபன் மற்றும் சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்கள்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...