‘ரோமியோ’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் ‘மழை பிடிக்காத மனிதன்’. பிரபல ஒளிப்பதிவாளரும், ‘அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது’, ‘கோலி சோடா’, ‘10 எண்றதுக்குள்ள’ போன்ற படங்களை இயக்கியவருமான விஜய் மில்டன் இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன், சரத்குமார், பிரபல கன்னட ஹீரோ டாலி தனஞ்செயா, மேகா ஆகாஷ், முரளி சர்மா, ப்ருத்வி ஆம்பர், சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய், ஏ.எல்.அழகப்பன், திருமலை பட இயக்குநர் ரமணா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகர் சத்யராஜ் சிறப்பு வேடம் ஒன்றில் நடித்திருக்கிறார்.
சக மனிதர்கள் மீதான தனது அக்கறை மற்றும் கருணையுள்ள ஒருவன் எப்படி ஒரு புதிய தீவில் நுழைந்து, யாரோ ஒருவரின் எதிர்காலமாக மாறுகிறார், என்பது தான் இப்படத்தின் கதை. அந்தமான் தீவுகள், டையூடாமன் தீவுகள் மற்றும் பல நகரங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் காட்சி மொழியில் மிக பிரமாண்ட திரைப்படமாக உருவாகியுள்ளது.
'கோடியில் ஒருவன்’, 'கொலை', 'ரத்தம்' படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸின் கமல் போஹ்ரா, டி லலிதா, பி, பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.
கருப்பொருள், உருவாக்கம் மற்றும் நடிகர்களின் திறமையாம நடிப்பிற்காக பார்வையாளர்களையும் விமர்சகர்களையும் இந்தத் திரைப்படம் ஈர்க்கும் என்று தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இத்திரைப்படம் 'கவிதைத் தனத்துடன் ஆக்ஷன் என்டர்டெய்னர்' என்ற புதிய வகையை (Genre) முன்வைக்கிறது. ஏனெனில், இது
வழக்கமான ஆக்ஷன் மசாலா படமாக இல்லாமல், கவிதைத் தனத்துடன் கூடிய ஆக்ஷன் பொழுதுபோக்கு திரைப்படம் என்ற புதிய ஜானரில் உருவாகியுள்ள இப்படம், தாழ்த்தப்பட்டவர்களை சமூகம் எப்படி நடத்துகிறது மற்றும் அவர்களின் எதிர்காலத்தை மாற்றும் ஹீரோவின் பாத்திரத்தைப் பற்றிய பின்னணியில் வலுவான உணர்ச்சிகளைக் கொண்ட கவிதையாகவும் உருவாகியுள்ளது.
தற்போது படத்தின் இறுதிக்கட்ட பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் மே 29 ஆம் தேதி படத்தின் டீசர் வெளியாக உள்ளது. டீசர் வெளியீட்டின் மூலம் படத்தின் விளம்பர பணிகளை தொடங்கியுள்ள படக்குழு, டீசர் வெளியான பிறகு படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்க உள்ளது.
தமிழ் சினிமாவை கடந்து தெலுங்கு சினிமாவில் தனக்கென்று தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ள விஜய் ஆண்டனியின் படங்கள் தொடர்ந்து தெலுங்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால், இப்படத்தையும் ‘டூஃபான்’ என்ற தலைப்பில் தெலுங்கில் வெளியிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிமுக இயக்குநர் லெனின் வடமலை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘யாரு போட்ட கோடு’...
Director Parameshwar Hivrale is bringing to the screen the life story of Gummadi Narsaiah- the CPI former MLA from Illandu, known as a champion of the poor and famously known for riding a bicycle to the Assembly...
அஷ்னா கிரியேஷன்ஸ் சார்பில் சையத் தமீன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சந்தோஷ் ரயான் இயக்கத்தில், உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இன்வஸ்டிகேஷன் கிரைம் திரில்லர் படம் ‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’...