தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் சுமார் 15 வருடங்களாக நடித்து வருபவர் நடிகை ஷில்பா. ‘சித்தி’ சீரியல் மூலம் மிகவும் பிரபலமான இவர், பெரும்பாலும் வில்லி கதாபாத்திரங்களில் நடிப்பதிலே ஆர்வம் காட்டி வருகிறார். அதற்கு காரணம், வில்லியாக நடித்தால் தான் தனது திறமையை முழுமையாக வெளிக்காட்ட முடியும், என்று அவரே கூறியுள்ளார்.
சீரியல் மட்டும் இன்றி ஒரு சில திரைப்படங்களிலும் சிறு வேடத்தில் நடித்திருக்கும் ஷில்பா, நடனத்திலும் அசத்துவார்.
சரி அது போகட்டும், விஷயத்திற்கு வருவோம். ஷில்பாவுக்கு வயது ஏறிக்கொண்டே போனாலும், இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அவருடன் சீரியலில் நடிக்க தொடங்கிய பல நடிகைகள் திருமணம் செய்துகொண்டு செட்டிலாக ஷில்பா மட்டும் இனும் சிங்கிளாகவே இருக்கிறார்.
ஏன் அப்படி? என்று அவரிடம் கேட்டதற்கு, “எனது அப்பா போன்ற ஒரு நல்லவரை நான் இதுவரை பார்த்ததில்லை. இனியும் பார்க்க போவதில்லை. அதனால் நான் திருமணமும் செய்துகொள்ள போவதில்லை.
திருமணம் செய்துக்கொண்டு பிறகு விவாகரத்து வாங்கி அப்பாவுடன் வாழ்வதை காட்டிலும், திருமணம் செய்யாமலேயே அப்பாவுடன் வீட்டில் வாழ்வதே சந்தோஷமாக இருக்கிறது. அதனால், எனது வாழ்க்கையில் நோ திருமணம். என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.” என்று கூறுகிறார்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள 'கருப்பு' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது...
கிருஷ்ண ஜன்மபூமியில் ’கிருஷ்ணாவதாரம்’ திரைப்பட டிரைலர் வெளியீடு ஆன்மிகச் சூழலில் நடைபெற்றது...
ஒரு தீவிரமான சமூக - தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்...