‘ராட்சசன்’ படத்தில் கிறிஸ்டோபர் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்து மிரட்டியவர் சரவணன். அப்படத்தை தொடர்ந்து உதயநிதியின் ’நெஞ்சுக்கு நீதி’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து கவனம் ஈர்த்தார். தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த ‘ராட்சசன்’ சரவணன் ’குற்றப்பின்னணி’ என்ற படத்தில் நாயகனாக அறிமுகமாகியுள்ளார்.
‘வாங்க வாங்க’, ‘ஐ.ஆர்.8’ போன்ற படங்களை இயக்கிய என்.பி. இஸ்மாயில் இயக்கியுள்ள இப்படத்தை ஆயிஷா அகமல் தயாரித்துள்ளார். சங்கர் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஜித் இசையமைத்துள்ளார். என்.பி.இஸ்மாயில் பாடல்கள் எழுதியுள்ளார். நாகராஜ்.டிபடத்தொகுப்பு செய்துள்ளார். ஆக்ஷன் நூர் சண்டைக்காட்சிகளை வடிவகைக்க, ரா.ராமமூர்த்தி வசனம் எழுதியுள்ளார்.
தற்போது நாட்டில் நடைபெறும் தினசரி செய்திகளால் நாம் கேட்டும் பார்த்தும் திகைக்கக் கூடிய பெண்கள் சார்ந்த குற்றங்களை பின்புலமாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை களத்தில், பெண்கள் தவறான நடவடிக்கைகளால் குடும்பம் மற்றும் தனி மனிதன் எவ்வாறு பாதிக்கப்படுகிறான் என்பதை சஸ்பென்ஸ் திரில்லருடன் சொல்வதே இந்த ‘குற்றப்பின்னணி’ படம்.
‘ராட்சசன்’ சரவணன் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில், தீபாளி, தாட்சாயிணி. சிவா, ஹனிபா, பாபு, நேரு, லால், அகமல், ஷர்விகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வரும் மே 31 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் ‘குற்றப்பின்னணி’ படத்தினை அண்ணாமலையார் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் அருணை டி.ராஜாராம் சுமதி வெளியிடுகிறார்.
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...
Strengthening its commitment to advanced cancer diagnosis and treatment, Iswarya Hospital today inaugurated the Iswarya Cancer Centre at its OMR Taramani facility in Chennai...