Latest News :

”தமிழ் மக்கள் அனைவரும் பார்வையிட வேண்டிய ஒரு கண்காட்சி” - கலைஞர் கண்காட்சி பற்றி நடிகர் பிரபு
Wednesday June-12 2024

கலைஞர் நூற்றாண்டு நிறைவு  விழாவை முன்னிட்டு, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சேகர்பாபு அவர்கள் ஏற்பாட்டில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள 'காலம் உள்ளவரை கலைஞர்' கண்காட்சியை இளையதிலகம் பிரபு பார்வையிட்டார்.

 

முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞரின் வாழ்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளான ' திருவாரூரில் தொடங்கி சென்னை மெரினா கடற்கரை நினைவிடம்  வரை' என நூற்றுக்கும் மேற்பட்ட அறிய புகைப்படங்களை பார்த்து ரசித்தார். 

 

'காலம் உள்ள வரை கலைஞர்'  'வாழும் வரலாறு முத்தமிழறிஞர் கலைஞரின் கதைப்பாடல் கண்காட்சியையும் பார்வையிட்டார்.

 

இந்நிகழ்ச்சியின் போது, மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. துறைமுருகன் அவர்கள், மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சென்னை மேயர் பிரியா அவர்கள் உடன் இருந்தனர்.

 

கண்காட்சியை பார்வையிட்ட இளைய திலகம் பிரபு அவர்கள் கண்காட்சி மிகச் சிறப்பாக இருக்கிறது இது தமிழ் மக்கள் அனைவரும் பார்வையிட வேண்டிய ஒரு கண்காட்சியாகும் என்றதுடன் கலைஞர் அவர்களின் திரை உலக வரலாற்றோடும் தமிழோடும் என் தந்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் நீக்கமற நிறைந்திருக்கிறார், என்பது எனக்கு மிகுந்த மன நிறைவை தந்தது என்று தெரிவித்தார்.

Related News

9817

என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களின் ஆதரவால் ஈடேறியது! - பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி
Sunday June-29 2025

ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ்...

அனல் அரசு மூலமாக என் மகன் சினிமாவில் அறிமுகமாவதை பாக்கியமாக நினைக்கிறேன் - நடிகர் விஜய் சேதுபதி நெகிழ்ச்சி
Sunday June-29 2025

விஜய் சேதுபதி அவர்களின் மகன் சூர்யா விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் படத்தை இயக்குனர் அனல் அரசு இயக்கியுள்ளார்...

ருத்ராவுக்கு நான் செய்ய வேண்டிய கடமை - நடிகர் விஷ்ணு விஷால் உருக்கம்
Sunday June-29 2025

ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் 'ஓஹோ எந்தன் பேபி' இன் அசோசியேஷன் வித் குட் ஷோ...

Recent Gallery