Latest News :

”தமிழ் மக்கள் அனைவரும் பார்வையிட வேண்டிய ஒரு கண்காட்சி” - கலைஞர் கண்காட்சி பற்றி நடிகர் பிரபு
Wednesday June-12 2024

கலைஞர் நூற்றாண்டு நிறைவு  விழாவை முன்னிட்டு, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. சேகர்பாபு அவர்கள் ஏற்பாட்டில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் அமைக்கப்பட்டுள்ள 'காலம் உள்ளவரை கலைஞர்' கண்காட்சியை இளையதிலகம் பிரபு பார்வையிட்டார்.

 

முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞரின் வாழ்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகளான ' திருவாரூரில் தொடங்கி சென்னை மெரினா கடற்கரை நினைவிடம்  வரை' என நூற்றுக்கும் மேற்பட்ட அறிய புகைப்படங்களை பார்த்து ரசித்தார். 

 

'காலம் உள்ள வரை கலைஞர்'  'வாழும் வரலாறு முத்தமிழறிஞர் கலைஞரின் கதைப்பாடல் கண்காட்சியையும் பார்வையிட்டார்.

 

இந்நிகழ்ச்சியின் போது, மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு. துறைமுருகன் அவர்கள், மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சென்னை மேயர் பிரியா அவர்கள் உடன் இருந்தனர்.

 

கண்காட்சியை பார்வையிட்ட இளைய திலகம் பிரபு அவர்கள் கண்காட்சி மிகச் சிறப்பாக இருக்கிறது இது தமிழ் மக்கள் அனைவரும் பார்வையிட வேண்டிய ஒரு கண்காட்சியாகும் என்றதுடன் கலைஞர் அவர்களின் திரை உலக வரலாற்றோடும் தமிழோடும் என் தந்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் நீக்கமற நிறைந்திருக்கிறார், என்பது எனக்கு மிகுந்த மன நிறைவை தந்தது என்று தெரிவித்தார்.

Related News

9817

பெண்களுக்கு எதிராக தொடர்ந்து நடக்கும் குற்றங்கள்! - தடுப்பதற்கான தீர்வை சொல்லும் ‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’
Tuesday December-09 2025

அஷ்னா கிரியேஷன்ஸ் சார்பில் சையத் தமீன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சந்தோஷ் ரயான் இயக்கத்தில், உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இன்வஸ்டிகேஷன் கிரைம் திரில்லர் படம் ‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’...

’வா வாத்தியார்’ தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் - நடிகர் கார்த்தி
Tuesday December-09 2025

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே...

Recent Gallery