விஜய் என்றாலே பிரச்சினை தான், என்ற ரீதியில் அவரது படங்களுக்கு தொடர் தொல்லைகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. தலைப்பு, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஸ்டிரைக் என்று அனைத்து பிரச்சினைகளும் தீந்த நிலையில், தற்போது விலங்கு நல வாரியத்தின் நோட்டீஸ் மற்றும் அனுமதி சான்றிதழ் குறித்து புது பிரச்சினை உருவாகியுள்ளது.
என்னதான் பிரச்சினை வந்தாலும், தீபாவளியன்று மெர்சல் கண்டிப்பாக வெளியாகும், என்று உறுதியாக ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் கூறியதோடு, தமிழகம் முழுவதும் போஸ்டர்களும் ஒட்டப்பட்டு வருகின்றது.
இதற்கிடையே, கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி மெர்சல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக இயக்குநர் அட்லி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், இதுவரை மெர்சல் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை, என்று தணிக்கை வாரியம் அறிவித்துள்ளது.
விலங்குகள் நல வாரியத்தின் நோட்டிஸுக்கு பதில் அளித்துள்ள தணிக்கை வாரியம், மெர்சல் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை, என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலைய்ல், தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை வாரியத்திடம் ‘மெர்சல்’ பட தயாரிப்பு தரப்பு பேரம் நடத்தி வருவதாக, வாட்ஸ்-அப்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும், இது குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...