விஜய் என்றாலே பிரச்சினை தான், என்ற ரீதியில் அவரது படங்களுக்கு தொடர் தொல்லைகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. தலைப்பு, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஸ்டிரைக் என்று அனைத்து பிரச்சினைகளும் தீந்த நிலையில், தற்போது விலங்கு நல வாரியத்தின் நோட்டீஸ் மற்றும் அனுமதி சான்றிதழ் குறித்து புது பிரச்சினை உருவாகியுள்ளது.
என்னதான் பிரச்சினை வந்தாலும், தீபாவளியன்று மெர்சல் கண்டிப்பாக வெளியாகும், என்று உறுதியாக ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனம் கூறியதோடு, தமிழகம் முழுவதும் போஸ்டர்களும் ஒட்டப்பட்டு வருகின்றது.
இதற்கிடையே, கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி மெர்சல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருப்பதாக இயக்குநர் அட்லி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால், இதுவரை மெர்சல் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை, என்று தணிக்கை வாரியம் அறிவித்துள்ளது.
விலங்குகள் நல வாரியத்தின் நோட்டிஸுக்கு பதில் அளித்துள்ள தணிக்கை வாரியம், மெர்சல் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை, என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலைய்ல், தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக தணிக்கை வாரியத்திடம் ‘மெர்சல்’ பட தயாரிப்பு தரப்பு பேரம் நடத்தி வருவதாக, வாட்ஸ்-அப்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும், இது குறித்த விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...