Latest News :

முதல்வரை சந்தித்த விஜய் - நிறுத்த சொன்ன முதல்வர்!
Sunday October-15 2017

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெர்சல்’ சுமார் 130 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தீபாவளியன்று வெளியாக உள்ள படத்திற்கு இதுவரை சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லையாம். மேலும், விலங்குகள் நலவாரியமும் படத்திற்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

 

ஏற்கனவே பல பிரச்சினைகளை கடந்து வந்திருக்கும் ‘மெர்சல்’, தீபாவளிக்கு நிச்சயம் ரிலீஸ் செய்வோம், என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறி வந்தாலும், விலங்குகள் நல வாரியத்தின் நடவடிக்கையால் படம் ரிலிஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், நடிகர் விஜய் இன்று சென்னை க்ரீன்வெஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்திற்கு வருகை தந்து, அங்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். 

 

இந்த சந்திப்பின் போது, முதல்வருடன் இருந்த சில அமைச்சர்கள், நடிகர்கள் தமிழக அரசியலை தொடர்ந்து விமர்சன் செய்து வருவதை நிறுத்துங்கள். பிரச்சினை என்றால் மட்டும் எங்களிடம் வரும் நீங்கள், எங்களையே அவமானப்படுத்தும் வகையில் விமர்சன் செய்யலாமா? என்று விஜயிடம் கூறியதாக கூறப்படுகிறது.

 

ஆனால், இந்த சந்திப்பு குறித்து விஜய் தரப்பிலோ அல்லது தமிழக அரசு தரப்பிலோ இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

Related News

984

”விஜய் முதலமைச்சரானால் நல்லதுதான்” - மனம் திறந்த பி.டி.செல்வகுமார்
Tuesday November-04 2025

பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...

கானா பாட்டு, ஆப்பிரிக்க சிறுவர்களின் நடனம்! - உற்சாகமூட்டும் “ஆஃப்ரோ தபாங்” பாடல்
Tuesday November-04 2025

அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...

கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவித்த ’ப்ரோவோக் கலை விழா 22025’!
Monday November-03 2025

நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...

Recent Gallery