நடிகை நமிதா, மூத்த நடிகர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தெலுங்கு மீடியாக்களில் செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருந்தாலும், உடல் எடை அதிகரிப்பால் போதிய வாய்ப்புகள் இன்றி இருந்த நமீதா, உடல் எடையை குறைத்தும் சினிமா வாய்ப்புகளை பெற முடியாமல் தவிக்கிறார்.
இதனால், கடை திறப்பு, கலை நிகழ்ச்சி என்று தனது கலை வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் அவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், அவரால் ரசிகர்களை கவர முடியாததால், நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே வெளியேற்றப்பட்டார்.
இந்த நிலையில், நடிகை நமீதாவுக்கும் மூத்த நடிகர் சரத்பாபுவிற்கும் திருமணம் என தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
இந்த செய்தி குறித்து நமீதா தரப்பில் எந்தவித விளக்கும் அளிக்கப்படவில்லை. அதே சமயம், இது குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகர் சரத்பாபு, ”8 வருடங்களுக்கு முன்பாக நான் நமீதாவுடன் ஒரு படத்தில் நடித்தேன். அன்று முதலே இதுபோன்ற வதந்திகள் வெளியாக தொடங்கிவிட்டது. இதுபோன்ற வதந்திகளால் என் பெயருக்கு கலங்கும் ஏற்படுகிறது.” என்று கூறியுள்ளார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...