இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘அமரன்’ திரைப்படம் இந்திய ராணுவ வீஅர்களின் தீரம் மிக்க வீரச்செயல்களை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் வரதராஜன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக சார் பல்லவி நடிக்கிறார்.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல் நிறுவனத்துடன் சோனி பிக்சர்ஸ் இண்டர்நேஷ்னல் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்.மகேந்திரன் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அறிமுக ஒளிப்பதிவாளர் சி.எச்.சாய் ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவு மற்றும் ஸ்டெஃபான் ரிக்டர் இணைந்து ஆக்ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளனர். ரொடக்ஷன் டிசைனராக ராஜீவன் பணியாற்ற, கலை இயக்குநராக சேகர் பணியாற்றுகிறார். ஆர்.கலைவாணன் படத்தொகுப்பு செய்ய, துணைத் தயாரிப்பை காட் ப்ளஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கவனிக்கிறது.
காஷ்மீரின் சவால் மிக்க நிலப்பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கும் ‘அமரன்’ திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘அமரன்’ வெளியாகிறது.
VR Dinesh and Kalaiyarasan’s recently released socio-political drama Thandakaaranyam is now streaming on Amazon Prime Video, and the film is witnessing a fresh wave of attention and conversations across India...
ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ’அமரன்’ திரைப்படம், கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அறிமுகமாகி உச்ச நடிகர்களாக உயர்ந்தவர்கள் போல், தானும் உச்சத்தை தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையோடு வெள்ளித்திரையில் நுழைந்த கவின், ஒரு வெற்றி படத்தை கொடுத்து விட்டு தனது செயலில் அதிரடி காட்ட தொடங்கினார்...