5250 நாடக மேடைகளை கடந்து வெற்றிகரமாக கலைப்பணியில் சிறந்து விளங்கும் சின்னத்திரை நடிகர் சங்க தலைவரும், தமிழக அரசின் கலைமாமணி விருதாளருமான திருவாளர் சிவன் ஶ்ரீனிவாசன் அவர்களின் தொடர் மானுட சேவையை பாராட்டும் வகையில் ஜூலை 14 ஆம் தேதி காரைக்கால் அம்மையார் கோயில் மணி மண்டபத்தில் இரவு 8:00 மணிக்கு நடைபெற்ற 'நேரம் நல்ல நேரம்' நாடகத்தில் இந்த வருடத்திற்கான ’சாஹிப் ஜாதா 2024 சேவைச் செம்மல்’ விருது அதன் தலைவர் செய்யது முஹம்மது கலீபா சாஹிப் காதிரி அவர்களால் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விருது பெற்ற சிவன் ஶ்ரீநிவாசன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் சந்தன மாலை அணிவித்தும் கவுரவிக்கப்பட்டது. பவுண்டேசன் செயலாளர் எம்.முஹம்மது தாஹா மரைக்காயர், நாகூர் தர்கா பரம்பரை ஆதீனம் சேக் மிரான் சாஹிப் மற்றும் காரைக்கால் சமூக ஆர்வலர் ஹாஜி முஹம்மது ஆரிப் மீயர் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த நிகழ்வில் காரைக்கால் சட்ட மன்ற உறுப்பினர் நாஜிம், கலைமாமணி காரை சுப்பையா உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
முன்னணி ஓடிடி தளமான ஜீ5 தளத்தின் புதிய திரில்லர் இணையத் தொடர் ‘ரேகை’...
ஸ்வர்க்கசித்ரா அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'ப்ரண்ட்ஸ்' திரைப்படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் B...
ஒயிட் ஸ்கிரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வி...