5250 நாடக மேடைகளை கடந்து வெற்றிகரமாக கலைப்பணியில் சிறந்து விளங்கும் சின்னத்திரை நடிகர் சங்க தலைவரும், தமிழக அரசின் கலைமாமணி விருதாளருமான திருவாளர் சிவன் ஶ்ரீனிவாசன் அவர்களின் தொடர் மானுட சேவையை பாராட்டும் வகையில் ஜூலை 14 ஆம் தேதி காரைக்கால் அம்மையார் கோயில் மணி மண்டபத்தில் இரவு 8:00 மணிக்கு நடைபெற்ற 'நேரம் நல்ல நேரம்' நாடகத்தில் இந்த வருடத்திற்கான ’சாஹிப் ஜாதா 2024 சேவைச் செம்மல்’ விருது அதன் தலைவர் செய்யது முஹம்மது கலீபா சாஹிப் காதிரி அவர்களால் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
விருது பெற்ற சிவன் ஶ்ரீநிவாசன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் சந்தன மாலை அணிவித்தும் கவுரவிக்கப்பட்டது. பவுண்டேசன் செயலாளர் எம்.முஹம்மது தாஹா மரைக்காயர், நாகூர் தர்கா பரம்பரை ஆதீனம் சேக் மிரான் சாஹிப் மற்றும் காரைக்கால் சமூக ஆர்வலர் ஹாஜி முஹம்மது ஆரிப் மீயர் ஆகியோர் உடனிருந்தனர்.
இந்த நிகழ்வில் காரைக்கால் சட்ட மன்ற உறுப்பினர் நாஜிம், கலைமாமணி காரை சுப்பையா உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
முன்னணி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடரின் முதன்மை கதாபாத்திரங்களில் ஒன்றில் நடித்து வரும் ஸ்ரீ தேவா, வில்லத்தனம் கதாபாத்திரம் என்றாலும் அதை நகைச்சுவையாக கையாண்டு தமிழக மக்களின் மனங்களில் இடம் பிடித்துள்ளார்...
தென்னிந்திய மீடியா உலகில் சிறந்து விளங்கும் திறமைகளை கௌரவிக்கும் விதமாக, TNIT 2025 தென்னிந்திய மீடியா விருதுகள் வழங்கும் விழா வரும் 23 ஆம் தேதி ஆகஸ்ட் பெங்களூரில் பேலஸ் கிரவுண்டில் நடைபெறுகிறது...
ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே...