'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, 'தயம்', 'பயமா இருக்கு' போன்ற படங்களில் நடித்துள்ள நடிகர் சந்தோஷ் தற்பொழுது நடிகர் கார்த்திக், கௌதம் கார்த்திக்கின் நடிப்பில் உருவாகவுள்ள ''மிஸ்டர் சந்திரமௌலி' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறுகையில், “கார்த்திக் சார், கவுதம் கார்த்திக், மகேந்திரன் சார், அகத்தியன் சார்,சதிஷ், ரெஜினா கசன்றா மற்றும் வரலக்ஷ்மி ஆகியோர் இப்படத்தில் நடிக்கவுள்ளதில் எங்களுக்கு பெருமை. இந்த பட்டியலில் நடிகர் சந்தோஷ் சேர்ந்துள்ளார். பல ஜாம்பவான்களோடு சேர்ந்து நடிக்கவுள்ளதில் அவர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளார். படம் முழுக்க வரும் ஒரு முக்கிய கதாபாத்திரம் அவருடையது.
சந்தோஷ் கதாநாயகனாக அறிமுகமான 'கதை திரைக்கதை வசனம் இயக்கம் ' படத்தில் சந்தோஷ் இயக்குநராக வாய்ப்பு கேட்டு தயாரிப்பாளர் தனஞ்செயனை சந்திக்கும் காட்சியில் பின்புறத்தில் இயக்குநர் திருவின் 'நான் சிகப்பு மனிதன்' படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கும். தற்பொழுது தனஞ்செயன் அவர்களின் தயாரிப்பில் , திருவின் இயக்கத்தில் ' மிஸ்டர் சந்திரமௌலி ' படத்தில் சந்தோஷ் நடிக்கவுள்ளார் என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல்.” என்றார்.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...