Latest News :

’அந்தகன்’ படத்திற்காக பூனையை தத்தெடுத்த நடிகர் பிரஷாந்த்!
Thursday August-08 2024

நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் இயக்கத்தில், பிரஷாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘அந்தகன்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை (ஆக.9) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் விளம்பர பணிகள் மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருவதால் மக்களிடம் மட்டும் இன்றி திரையுலகினரிடமும் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நிலையில், ‘அந்தகன்’ படத்தில் பூனை ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாகவும், அதற்காக குட்டி பூனை ஒன்றை தத்தெடுத்து தனது வீட்டில் வைத்து வளர்த்து வந்த பிரஷாந்த், படத்தில் அந்த பூனையுடன் நடித்திருக்கும் காட்சிகள் அனைத்தும் திரையரங்கில் கைதட்டல், பெறும் என்று படத்திற்கு வசனம் எழுதியிருக்கும் பட்டுக்கோட்டை பிரபாகர் பாராட்டியுள்ளார்.

 

இது குறித்து மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களை கூறிய பட்டுக்கோட்டை பிரபாகர், “நாளை முதல் இந்தியில் மிகப் பெரிய வெற்றியைத் தொட்ட ’அந்தாதுன்’ படத்தின் புதிய தமிழ் வடிவம் ’அந்தகன்’, அந்தப் படம் பார்க்காதவர்களுக்கு சுவாரசியமான திருப்பங்கள் கொண்ட திரைக்கதை த்ரில் அனுபவம் கொடுக்கும். பார்த்தவர்களுக்கு தமிழுக்காக செய்யப்பட்ட மாற்றங்கள் புதிய அனுபவம் கொடுக்கும்.

 

நாணயமிக்க தயாரிப்பாளரும்,(இந்தப் படத்திற்கு நான் வசனம் எழுதியபோது படப்பிடிப்பு துவங்கும் முன்பாகவே என் ஊதியத் தொகையைக் கொடுத்தாராக்கும்) நினைத்தது நினைத்தபடி வரவேண்டும் என்பதில் பிடிவாதம் கொண்ட இயக்குநருமான தியாகராஜனுடன் முதல் முறையாகவும், பிரபல நட்சத்திரம் என்கிற பந்தா ஒரு சதவிகிதம் கூட இல்லாத இனிய நண்பர் பிரஷாந்துடன் மூன்றாவது முறையாகவும் இணைந்து பணியாற்றியுள்ளேன். 

 

இயக்குநர் தியாகராஜன் பற்றி சொல்வதானால் படு எனர்ஜிடிக் பர்சனாலிட்டி. இப்படத்துக்கு முன்பே சில முறை சந்தித்து பேசி இருக்கிறேன். அப்படி பேசும் போதெல்லாம் வார்த்தைகளை கவனமாக கோர்த்து அளவாக பேசும் அவரின் பாணி வியக்க வைக்கும். குறிப்பாக பேச வேண்டியதைத் தவிர எதையும் யோசிக்க கூட விட மாட்டார். பார்க்க கொஞ்சம் மெஜஸ்ட்டிக்காக தோற்றமளிக்கும் அவரது மனதின் மென்மை பஞ்சை விட இலகுவானது என்பதை புரிந்து கொள்ளலாம். அப்படி இருப்பதால் தான் இப்படி ஒரு உயர்ந்த நிலையில் இருக்கிறார். அவர் இந்த படத்தை தேர்ந்த மிலிட்டரி மேன் போல் செயல்பட்டு அருமையாக உருவாக்கி இருக்கிறார்.

 

Pattukottai Prabhakar

 

நாயகன் பிரஷாந்தும் படு பிரண்ட்லி, ஒரு போதும் தன் அந்தஸ்தைக் காட்டவோ, பின்னணியை வெளிப்படுத்தவோ விரும்பாதவர் என்பதே அவரின் பலம். அதிலும் இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டராக பூனை ஒன்று வருகிறது, அப்பூனை ரோலுடன் ஐக்கியமாக வேண்டும் என்பதற்காக ஒரு குட்டி பூனையை தத்தெடுத்து வீட்டிலே வைத்து வளர்த்து அதனுடன் நடித்துள்ள ஒவ்வொரு காட்சியும் க்ளாப்ஸ் அள்ளும் என்பது நிச்சயம். அது மட்டுமில்லாமல் பிரஷாந்த் லண்டன் டிரினிட்டி இசைக்கல்லூரியில் பியானோ இசையில் நான்காவது கிரேடில் தேர்ச்சி பெற்றவர் என்பதால் பியானோ வாசிக்கும்  காட்சிகள் எல்லாம் வேற லெவல். மொத்ததில் இந்தப் படம் வெற்றிபெற்றால் இயக்குநர் பல புதிய படங்களைத் தயாரிப்பார். நல்ல நடிப்புத்திறன் கொண்ட பிரஷாந்த் வெற்றி வலம் வருவார். எனவே வெற்றிக்கு வாழ்த்துங்கள், திரையரங்கில் படம் பார்த்து ஆதரியுங்கள்.” என்றார்.

 

ஸ்டார் மூவிஸ் சார்பில் ப்ரீத்தி தியாகராஜன் வழங்க, சாந்தி தியாகராஜன் தயாரித்திருக்கும் இப்படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, யோகி பாபு, ஊர்வசி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

Related News

9939

துல்கர் சல்மானை நடிப்பு சக்கரவர்த்தியாக மக்கள் கொண்டாடுவார்கள் - நடிகர் ராணா பாராட்டு
Thursday November-06 2025

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், துல்கர் சல்மான், ராணா டகுபதி, சமுத்திரக்கனி, பாக்கியஸ்ரீ ஆகியோரது நடிப்பில் பீரியட் படமாக உருவாகியுள்ளது ‘காந்தா’...

சினிமாவில் வெற்றி பெற 4 விசயங்கள் அவசியம்! - இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்
Thursday November-06 2025

பெருமாள் கிரியேஷன்ஸ் சார்பில் திருமதி பி...

’ஆர்யன்’ பட கிளைமாக்ஸ் மாற்றம்! - வெற்றி விழாவில் படக்குழு தகவல்
Wednesday November-05 2025

அறிமுக இயக்குநர் பிரவீன்.கே இயக்கத்தில், விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் செல்வராகவன் நடிப்பில், இன்வஸ்டிகேடிவ் திரில்லராக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி வெளியான ‘ஆர்யன்’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது...

Recent Gallery