பீட்டாவின் சதியால் முடங்கிப் போன ‘மெர்சல்’ தீபாவளியன்று வெளியாகுமா இல்லையா? என்பது இன்று தெரிந்துவிடும்.
மெர்சல் படத்திற்கான அனுமதி சான்றிதழ் குறித்து இன்று அவசர கூட்டத்திற்கு வனவிலங்கு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. இன்றைய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு விட்டால் மெர்சல் தீபாவளியன்று வெளியாகும். அப்படி கூட்டத்தில் எந்த முடிவு எட்டப்படாமல் போனால், நாளை விடுமுறை நாள் என்பதால், மெர்சல் படத்திற்கு நாளை அனுமதி சான்றிதழ் கிடைக்காது. அனுமதி சான்றிதழ் இல்லை என்றால் படத்தையும் ரிலீஸ் செய்ய முடியாது.
இந்த நிலையில், தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளில் முதல் இரண்டு நாட்களுக்கான டிக்கெட்கள் ரசிகர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், ஒரு டிக்கெட்டின் விலை ரூ.1200 என டிக்கெட்டிலே அச்சடிக்கப்பட்டு விற்பனையாகிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, தயாரிப்பாளர் சங்க தலைவரான நடிகர் விஷால், தமிழக அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக சினிமா டிக்கெட்கள் விற்பனை செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும், என்று தெரிவித்திருந்தார்.
தற்போது ‘மெர்சல்’ படத்தின் டிக்கெட் ரூ.1200-க்கு விற்கப்பட்டு வரும் நிலையில், விஷால் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார், என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
கன்னட திரையுலகின் முன்னணி திரைப்பட நிறுவனமான KVN Productions வெங்கட் கே...
ஜெய் ஸ்டுடியோ கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில், சாய் காவியா சாய் கைலாஷ் வழங்க, பத்மராஜு ஜெய்சங்கர் தயாரிப்பில், பாஸ்கர் சதாசிவம் இயக்கத்தில், சமூக அக்கறை மிக்க களத்தில், கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ’உருட்டு உருட்டு’...
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...