Latest News :

சென்னையில் நடைபெற்ற டென்பின் பவுலிங் சாம்பியன்ஷிப் 2025 நிறைவு!

7f7a7a18a02ad39cb6af0c7d6014d64f.jpg

சென்னை, துரைபாக்கத்தில் உள்ள லெட்ஸ்பௌல் (LetsBowl) அரங்கில் ஜனவரி 31 ஆம் தேதியன்று நிறைவடைந்த 10வது தமிழ்நாடு மாநில டென்பின் பவுலிங் சாம்பியன்ஷிப் 2025 போட்டியின் இறுதிப்போட்டியில் கணேஷ் NT, மகிபால் சிங்கை (352–307) என்ற கணக்கில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

 

இரண்டு ஆட்டங்களின் மொத்த பின்‌ஃபால் அடிப்படையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், முதல் ஆட்டத்தில் கணேஷ் NT, மகிபால் சிங்கை (182–143) 39 பின்கள் வித்தியாசத்தில் முந்தினார்.

 

இரண்டாவது ஆட்டத்தில் மகிபால் சிங் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி (164–170) தோல்வியடைந்தார். இதன் மூலம் கணேஷ் NT இறுதியாக சாம்பியன் பட்டத்தை வென்றார்.

 

முன்னதாக, முதல் ஸ்டெப்-லாடர் போட்டியில் தரவரிசை 3-ல் இருந்த யூசுப் ஷப்பீர், ஆனந்த் பாபு அவர்களை (328–317) தோற்கடித்து இரண்டாவது ஸ்டெப்-லாடர் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

 

இரண்டாவது ஸ்டெப்-லாடர் போட்டியில் தரவரிசை 2-ல் இருந்த கணேஷ் NT, யூசுப் ஷப்பீர் அவர்களை (414–370) என்ற கணக்கில் தோற்கடித்தார். 3 வது சுற்று முடிவில், மகிபால் சிங் மொத்த பின்‌ஃபால் 6163 மற்றும் சராசரி 192.59 உடன் அட்டவணையின் முதலிடத்தில் முடித்தார். அவரைத் தொடர்ந்து கணேஷ் NT (பின்‌ஃபால் – 6064, சராசரி – 189.50) இடம் பெற்றார்.

 

தகுதிச்சுற்றுகள் 28 பவுலர்கள் பங்கேற்புடன், இரட்டை ஆயில் பேட்டர்ன் சூழ்நிலையில் 3 நாட்கள் நடைபெற்றன.

 

இந்த நிகழ்ச்சியில் Renaissance Events and Experiences Pvt Ltd நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் (MD) உமேஷ் ஜே. குமார் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

 

சிறப்பு பரிசுகள்: 

 

32 ஆட்டங்களில் அதிகபட்ச சராசரி:

 

மகிபால் சிங் (பின்‌ஃபால் – 6163, சராசரி – 192.59)

 

225க்கும் மேற்பட்ட ஸ்கோர்களின் அதிகபட்ச எண்ணிக்கை:

 

மகிபால் சிங் (5)

Recent Gallery